TNPSC முக்கிய அறிவிப்பு – குரூப் 4 கலந்தாய்வு ஒத்திவைப்பு !
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் ஆனது தட்டச்சு பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு கலந்தாய்வை நிவர் புயல் காரணமாக, ஒத்திவைத்துள்ளது. சென்ற வருடம் நடைபெற்ற TNPSC குரூப் 4 பணியிடங்களுக்கான கலந்தாய்வு, கொரோனா காரணமாக பல்வேறு முறை ஒத்திவைக்கப்பட்டு, தற்போது நவம்பர் 25 முதல் 28 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
வேலைவாய்ப்பு செய்திகள்
நிறுவனம் | தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் |
தேர்வின் பெயர் | Group 4 |
Status | Counselling Date Postponed |
சான்றிதழ் சரிபார்ப்பு தேதி | 25.11.2020 to 28.11.2020 |
புதிய தேதி | 08.12.2020 & 09.12.2020 |
நிவர் புயல்:
வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயலால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும் நாளையும் அதிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதனால் அரசுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக பல்வேறு தேர்வுகள் ஒத்திவைக்கப்படுள்ளன. ஏற்கனவே பல்வேறு கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் அனைத்து தேர்வுகளை ஒத்திவைத்து வருகின்றன. இந்த தேர்வுகள் டிசம்பர் மாதம் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
TNPSC குரூப் 4 கலந்தாய்வு ஒத்திவைப்பு:
நிவர் புயல் காரணமாக, நவம்பர் 25 முதல் 28 வரை நடைபெற இருந்த குரூப் 4 தட்டச்சு பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு கலந்தாய்வு ஆனது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேற்படி, TNPSC குரூப் 4 கலந்தாய்வு டிசம்பர் 8 மற்றும் 09 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
Check Notification 2020
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்