நிவர் புயலால் டி.என்.பி.எஸ்.சி.குரூப் 2 தேர்வுகள் ஒத்திவைப்பு !!!
தமிழகத்தில் தற்போது நிவர் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பொது விடுமுறை அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது குரூப் 2 பணிகளுக்கான நேர்காணல் சோதனையும் தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள்
நிவர் புயல் !
தமிழகத்தில் தற்போது வங்கக்கடலில் இருந்து நிவர் என்ற பெயரில் ஒரு அதிதீவிர புயல் ஏற்பட்டுள்ளது, இந்த புயலின் காரணமாக பல்வேறு பணிகள் தற்போது முடக்கப்பட்டுள்ளது. அதிதீவிர புயலாக கரையை கடந்த புயலினால் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்கள் கனமழையால் அவதிப்படுகின்றன. மேலும் பொது விடுமுறையும் 13 மாவட்டங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
டி.என்.பி.எஸ்.சி.குரூப் 2 தேர்வுகள் ஒத்திவைப்பு !!!
தமிழகத்தில் அரசு பணிகளை நிரப்பிடும் தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) ஆனது தற்போது குரூப் 2 தேர்வுகள் ஒத்திவைப்பதாக அறிவித்து உள்ளது. இது குறித்து டி.என்.பி.எஸ்.சி., தெரிவித்து இருப்பதாவது: டி.என்.பி.எஸ்.சி.,சார்பில் நடத்தப்பட்ட குரூப் 2 பணிகளுக்கான 3ம் கட்ட நேர்முகத்தேர்வு நடைபெற இருந்தது. இந்நிலையில் நிவர் புயல் காரணமாக 3-ம் கட்ட நேர்முகத் தேர்வு ஒத்திவைக்கப் படுவதாகவும், நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
முன்னதாகவே திட்டமிட்டபடி, தமிழகத்தின் பல்வேறு நகரங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் நாளை சி.ஏ., தேர்வுகள் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை நடைபெற இருந்த அந்த சி.ஏ. தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. இந்த தேர்வுகள் பின்னர் வரும் டிச.,9 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்