TNPSC குரூப் 2 & 2A Mains தேர்வு தேதி – வெளியீடு!
தமிழ்நாடு அரசு பணி தேர்வாணையம் குரூப் 2 & 2A பணிக்கான இரண்டாம் கட்ட தேர்வு நடைபெறும் தேதி குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
TNPSC Group 2 & 2A Mains Exam:
தற்போது குரூப் 2 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் நேற்று (09.11.2022) வெளியாகி உள்ளது . இதனைத் தொடர்ந்து குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வானது வரும் 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி 25 ஆம் தேதி நடைபெற உள்ளது. முதல் நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த தேர்வை எழுத தகுதி அடைந்துள்ளனர்.
முதன்மை எழுத்துத் தேர்வுக்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் தேர்வுக் கட்டணமாக ₹ 200/- (ரூபா இருநூறு மட்டும்) செலுத்த வேண்டும். எனவே, விண்ணப்பதாரர்கள் 15.12.2022 அன்று அல்லது அதற்கு முன் கட்டணத்தைச் செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய ஆவணங்கள் தொடர்பான விவரங்கள் ஆணையத்தின் இணையதளத்தில் கிடைக்கப்பெறும். மேலும் விண்ணப்பதாரர்களுக்கு SMS மற்றும் மின்னஞ்சல் மூலம் மட்டுமே மேற்கண்ட விவரங்கள் தெரிவிக்கப்படும். இது தொடர்பான தனிப்பட்ட தகவல் விண்ணப்பதாரர்களுக்கு தபால் மூலம் அனுப்பப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.