டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 முதனிலை தேர்விற்கு இலவச மாதிரி போட்டித் தேர்வு !!
பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தற்போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக நடத்தப்பட இருக்கும் குரூப் 1 முதனிலை தேர்விற்கு இலவச மாதிரி போட்டித் தேர்வு நடத்தப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள்
TNPSC குரூப் 1 தேர்வு !
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக குரூப் 1 சேவைப் பணிகளுக்கான அறிவிப்பு இந்த ஆண்டின் தொடக்கத்தில் அதாவது, ஜனவரி 2020ல் வெளியிடப்பட்டது. மொத்தம் 69 காலிப்பணியிடங்களை கொண்ட அந்த அறிவிப்பிற்கு பதிவு செய்வோர் முதனிலை தேர்வு எழுத வேண்டும். அந்த தேர்வானது வரும் 03.01.2021 அன்று நடைபெற உள்ளது.
தற்போது அந்த தேர்விற்கு தயாராகிக் கொண்டிருக்கும் விண்ணப்பதாரர்களுக்காக இலவச மாதிரி போட்டித் தேர்வினை பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடத்த பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் திட்டமிட்டுள்ளது. இந்த தேர்வுகள் 16.12.2020, 18.12.2020, 22.12.2020, 24.12.2020 மற்றும் 29.12.2020 ஆகிய தேதிகளில் பிற்பகல் 02.30 மணி முதல் மாலை 05.30 மணி வரை நடத்தப்பட உள்ளது.
ஏனைய போட்டி தேர்வுகள் :
இந்த மையத்தில் டி.என்.பி.எஸ்.சி.மட்டுமில்லாது எஸ்.எஸ்.சி., வங்கி தேர்வுகள் (SBI PO) போன்றவற்றிற்கும் இலவச தேர்வுகள் மாதிரி தேர்வுகள் நடைபெற உள்ளது. அவற்றிக்கு பதிவு செய்வதற்குரிய வழிமுறைகளை கீழே காணலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
இந்த தேர்வுகளில் கலந்துக் கொள்ள விரும்புவோர் 15.12.2020 அன்றுக்குள் 94990 55913 என்ற வாட்ஸ்அப் எண்ணில் அல்லது நேரடியாக தொடர்புகொண்டு தங்களின் பெயர் மற்றும் ஆதார் எண் ஆகியவற்றுடன் பதிவு செய்து கொண்டு தேர்வில் கலந்து கொள்ளலாம்.
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |