TNPSC Forestry Specialist தேர்வுக்கான மாற்று தேதி வெளியீடு – தேர்வாணையம் அறிவிப்பு!!
தமிழ்நாடு வன சார்நிலைப்பணியில் அடங்கிய வனத்தொழில் பழகுநர் பணியிடங்களுக்கு கடந்த 10ம் தேதி அன்று எழுத்து தேர்வு மாண்டஸ் புயல் காரணமாக தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டது. தற்போது இதற்கான மாற்று தேதி குறித்த அறிவிப்பை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
தேர்வு தேதி
தமிழ்நாடு வன சார்நிலைப் பணியில் அடங்கிய வனத்தொழில் பழகுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பை TNPSC தேர்வாணையம் வெளியிட்டது. மேலும் இப்பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு 03.12.2022 முதல் 13.12.2022 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் 10.12.2022 அன்று நடைபெற இருந்த எழுத்து தேர்வு மட்டும் மாண்டஸ் புயல் காரணமாக தேதி குறிப்பிடாமல் தள்ளி வைப்பதாக TNPSC தேர்வாணையம் அறிவித்தது.
Follow our Instagram for more Latest Updates
தற்போது இத்தேர்வுக்கான மாற்று தேதி குறித்த அறிவிப்பை TNPSC தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வனத்தொழில் பழகுநர் பணியிடத்திற்கான 10.12.2022 அன்று ஒத்தி வைக்கப்பட்ட தேர்வை 27.12.2022 அன்று நடத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 27.12.2022 அன்று காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை Marine Biology தேர்வும், 2.30 மணி முதல் 5.30 மணி வரை Physics தேர்வும் நடைபெறும் என்ற் அறிவிக்கப்பட்டுள்ளது.
TANUVAS பல்கலைக்கழகத்தில் ரூ.12,000/- ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது || நேர்காணல் மட்டுமே!
Exams Daily Mobile App Download
அத்துடன் ஏற்கனவே பதிவிறக்கம் செய்துள்ள தேர்வுக்கூட சீட்டை பயன்படுத்தி கொண்டு அதில் குறிப்பிடப்பட்டுள்ள தேர்வு மையத்திற்கு சென்று தேர்வு எழுதலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் திருச்சி மாவட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டவர்களுக்கு மட்டும் திருத்தம் செய்யப்பட்ட தேர்வுக்கூட நுழைவு சீட்டு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை https://www.tnpsc.gov.in/ இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.