TNPSC ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு 2024 – 50+ காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் எனப்படும் TNPSC ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் Assistant Public Prosecutor பணிக்கென காலியாக உள்ள 51 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Assistant Public Prosecutor பணிக்கென காலியாக உள்ள 51 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
- அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் BL / Law தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
- விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 26 மற்றும் அதிகபட்ச வயதானது 36 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
PAK vs ENG 2024: டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜோ ரூட் சரித்திர சாதனை.. வெளியான முக்கிய தகவல்!!
- தேர்வு செய்யப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு Level 22 அளவில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- விண்ணப்பதாரர்கள் Preliminary Exam, Main Exam மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 12.10.2024ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.



























