மக்களின் கவனத்திற்கு.. நாளை (09-05-2025) மின்தடை.. மின்வாரியம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு..!!
தமிழக மின்சார வாரியத்தின் சார்பில் தடையில்லா மின்சார விநியோகமானது தமிழகம் முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், துணை மின் நிலையங்களில் மாதம் ஒரு நாள் மட்டும் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருவது வழக்கம். அந்த வகையில் நாளை (09-05-2025) சென்னை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் உள்ள சில பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை செய்யப்படும் பகுதிகள்:
சென்னை:
பட்டாபிராம், சிடிஎச் சாலை, திருவள்ளுவர் நகர், கக்கன்ஜி நகர், சத்திரம், காமராஜபுரம், சோழன் நகர், விஜிஎன் இரண்டாம் கட்டம் முதல் ஏழாவது, ஐயப்பன் நகர், கண்ணம்பாளையம், VGV நகர், தனலட்சுமி நகர்.
திருவாரூர்:
திருத்துறைப்பூண்டி, மேட்டுப்பாளையம், விளக்குடி, ராயநல்லூர் ஆகிய பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட உள்ளது.
























