தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவருக்கு கொரோனா உறுதி – பெற்றோர்கள் அதிர்ச்சி!!
திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் 12ம் வகுப்பு மாணவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பள்ளிகள் திறப்பு:
தமிழகத்தில் உள்ள பள்ளிகள் அனைத்தும் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்டிருந்தது. இதனால் மாணவர்களுக்கு பாடங்கள் அனைத்தும் ஆன்லைன் முறையில் நடத்தப்பட்டது. வழக்கமாக ஜூன் மாதத்தில் தொடங்கும் கல்வி ஆண்டு நடப்பு ஆண்டில் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து தான் தொடங்கப்பட்டது.
ஆன்லைனில் ஓட்டுநர் உரிமம் உட்பட 18 விதமான சேவைகள் – மத்திய அமைச்சகம் அறிவிப்பு!!!
பள்ளிகள் அனைத்தும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் நெருங்கி வரும் காரணத்தாலும், தொற்றின் தாக்கம் சற்று குறைந்து காணப்பட்டதாலும் ஜனவரி 19ம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது. பள்ளிகளை திறக்க அனுமதி வழங்கினாலும் அரசு பள்ளிகள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு விதிமுறைகளை அறிவுறுத்தியுள்ளது. இதன்படி, பள்ளிகள் அனைத்தும் அரசு அறிவுறுத்திய நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தையும் பின்பற்றியது.
மாணவனுக்கு தொற்று:
திருச்சி மாவட்டத்தில் ஆரம்பத்தில் இருந்து கொரோனா தொற்று பாதிப்பு குறைவாகவே இருந்தது. தற்போது 9, 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகள் மட்டும் செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில், திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு மாணவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பள்ளியில் படிக்கும் சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
[table id=1078 /