TRB ஆசிரியர்களுக்கு அப்பாய்ண்ட்மென்ட் ஆர்டர் வழங்குவது எப்போது ??
தமிழகத்தில் உள்ள ஆசிரியர்கள் பணியிடங்களை தமிழக ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பு வாரியம் ஆனது வருடந்தோறும் தேர்வுகளை வைத்து தேர்வு செய்து பணி நியமனம் வழங்கும். அதேபோல் ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பு வாரியம் மூலமாக முதுகலை ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு போட்டி தேர்வு நடத்தப்பட்டது.
பணி நியமனம் :
இந்த முதுகலை ஆசிரியர்கள் பணியிடங்களுக்காக நடத்தப்பட்ட தேர்வுகளில் தேர்ச்சி பெற்றோரில் வேதியியல் பாடத்தினை தவிர பள்ளிக் கல்விக்காக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டு விட்டது. மேலும் அவர்கள் பணியில் அமர்ந்தும் விட்டனர்.
கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் :
ஆனால் கள்ளர் சீரமைப்பு துறை பள்ளிகளுக்காக தேர்வு செய்யப்பட்ட ஆசிரேயர்களுக்கு இன்னும் பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை. இவர்கள் மொத்தம் 30 ஆசிரியர்கள் இருப்பர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களுக்கு இன்னும் ஆணை வழங்கப்படாததினால் அவர்களால் இன்னும் பணியில் அமர இயலவில்லை.
வேலைவாய்ப்பு செய்திகள்
கள்ளர் சீரமைப்புதுறை அறிக்கை :
கள்ளர் பள்ளிகள் மாவட்ட தலைவர் அன்பழகன் ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதில், ” ஒரே நேரத்தில் தேர்வு செய்யப்பட்டு பலர் பணியில் சேர்ந்து 7 மாதங்கள் சம்பளம் பெற்று விட்டனர். ஆனால் கள்ளர் சீரமைப்பினு துறை நியமனமே இழுத்தடிக்கப்படுகிறது” என்று அறிவித்து உள்ளார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்