தமிழகத்தில் பொதுப் போக்குவரத்திற்கு அனுமதி ???
கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பொது முடக்கம் பின்பற்றப்பட்டாலும் கொரோனா பரவல் குறையவில்லை இந்த பொதுமுடக்கம் பரவலைத் தடுக்காது சற்றுத் தள்ளிப்போட மட்டுமே செய்யும் என மருத்துவ வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பொது முடக்கத்திலிருந்து பல்வேறு தளர்வுகள், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான அறிவிப்புகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டு வருகிறது. இருப்பினும் பொது போக்குவரத்து ரத்து செய்யப்படாதது, இ பாஸ் முறை தொடர்ந்து அமலில் இருப்பது மக்களின் வாழ்வாதரத்தை கடுமையாக பாதித்துள்ளது.
பாதிப்பு சற்று குறைவாக இருந்தபோது சென்னை தவிர பிற இடங்களில் மாவட்ட அளவிலும், மண்டலங்கள் அளவிலும் குறைந்த அளவிலான பேருந்துகள் இயக்கப்பட்டன. தெற்கு ரயில்வே மூலம் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டன. மக்களிடையே நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக அமைந்த அந்த அறிவிப்பு பின்னர் குறுகிய காலத்தில் விலக்கிக்கொள்ளப்பட்டது.
பணி நிமித்தமாகவும், வியாபார நிமித்தமாகவும் அருகிலுள்ள ஊர்களுக்கு கூட செல்ல முடியாத சூழலே நிலவுகிறது. தமிழ்நாடு அரசு புதிதாக மாவட்டங்களைப் பிரித்தபின் மாவட்ட எல்லைகள் சுருங்கிவிட்டன. இதனால் வேலைக்காக தாங்கள் தினமும் சென்றுவரும் ஊர்களுக்குகூட மக்கள் இ பாஸுக்கு விண்ணப்பிக்க வேண்டியுள்ளது. இ பாஸ் கிடைத்தாலும் பயணம் மேற்கொளவது சவாலானதாக உள்ளது.
பொது போக்குவரத்துக்கு அனுமதியளிக்கப்படவில்லை என்பதால் கார்களிலும், ஆட்டோக்களிலும் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை மறுதினம் (ஆகஸ்ட் 29) மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொள்கிறார். ஆகஸ்ட் 31ஆம் தேதியுடன் தற்போது அமலில் உள்ள பொது முடக்கம் நிறைவடையவுள்ள நிலையில் இந்த ஆலோசனைக்குப் பின்னர் முக்கிய முடிவுகள் வெளியாகவுள்ளன. அவை செப்டம்பர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளன.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்