தமிழகத்தில் தியேட்டர்கள் மூடல்? உரிமையாளர்கள் ஆலோசனை!!
கொரோனா இரண்டாம் அலையை எதிர்கொள்ளும் வகையில் மாநிலம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதனால் தியேட்டர்களின் இயக்கம் குறித்து உரிமையாளர்கள் ஆலோசனை நடத்த உள்ளனர்.
தியேட்டர்கள் திறப்பு:
கடந்த ஆண்டு நாடு முழுவதும் பரவிய கொரோனா தொற்று காரணமாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. அதில் கோவில்கள், மத வழிபாட்டு தலங்கள், மால்கள், சந்தைகள், கடற்கரைகள், தியேட்டர்கள் என மக்கள் கூடும் அனைத்து இடங்களுக்கும் தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா பரவல் குறைந்து வந்ததை ஒட்டி மாநிலங்கள் தோறும் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இதனடிப்படையில் தியேட்டர்கள் மீண்டுமாக செயல்பட துவங்கியது.
TN Job “FB Group” Join Now
முன்னதாக தியேட்டர்கள் அடைக்கப்பட்டிருந்த போது அதை நம்பி இருந்த பல தொழிலாளர்களின் குடும்பங்கள் பாதிக்கப்பட்டது. அந்த தாக்கத்திலிருந்து அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது மீண்டுமாக அதே சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டின் படி தியேட்டர்களில் 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தியேட்டர்களின் இயக்கம் குறித்து அதன் உரிமையாளர்கள் ஆலோசனை நடத்த உள்ளனர்.
பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு – மாநில அரசு அறிவிப்பு!!
காணொளி வாயிலாக நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில், மால்களில் உள்ள திரையரங்குகளில் காலை 9 மணிக்கு முதல் காட்சியும், 12 மற்றும் 3 மணிக்கு மதிய காட்சியும், 6 மணிக்கு இறுதிக்காட்சியும் திரையிடலாம் என்று ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதே போல தனி திரையரங்குகளில் காலை 10 மணிக்கு முதல் காட்சியும், 1 மற்றும் 3 மணிக்கு மதிய காட்சியும், 7 மணிக்கு இறுதிக்காட்சியும் திரையிடலாம் என ஆலோசனை நடத்த உள்ளனர். இருந்தாலும் மீண்டுமாக திரையரங்குகளை மூடுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.