கோவில்களில் காலிப்பணியிடங்களை நிரப்ப திடீர் அனுமதி – கமிஷனர் கடிதம்!!
தமிழகத்தில் அறநிலைத்துறைக்கு கீழ் செயல்படும் கோவில்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப கமிஷனரின் ஒப்புதல் பெற நிபந்தனை விதித்து உத்தரவிட்டிருந்த நிலையில் தற்போது திடீர் அனுமதி அளித்துள்ளது கோவில் அலுவலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காலிப்பணியிடங்களை நிரப்ப அனுமதி:
தமிழகத்தில் அறநிலைத்துறைக்கு கீழ் உள்ள கோவில்களில் காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்து அனைத்து மண்டல இணை ஆணையருக்கு, கமிஷனர் பிரபாகர் கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளவை,”அறநிலைத்துறைக்கு கீழ் உள்ள கோவில்களில் காலிப்பணியிடங்களை வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி நிரப்ப தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும். மேலும் புதிதாக தேவைப்படும் பணியிடங்களுக்கு அங்கீகரித்த சம்பளப்பட்டியலில் இடம்பெறாத பணிகளுக்கு தினக்கூலி, தொகுப்பூதிய அடிப்படையில் பணிநியமனம் செய்யக் கோரியும் பல முன்மொழிகள் சார்நிலை அலுவலர்களிடம் இருந்து இந்த அலுவலகத்துக்கு தகவல்கள் வரப்பெறுகின்றன.
ஜனவரி 11 முதல் மீண்டும் பள்ளிகள் திறப்பு- அரசு அறிவிப்பு!!!
அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்கள் பணியிட பட்டியலில் இடம் பெறாத கோவிலுக்கு மிகவும் அத்தியாவசியமான பணியிடமாக இருப்பின் பணியிட அவசியம் குறித்து விரிவான காரணங்களுடன் புதிய பணியிடம் குறித்து விளக்கும் வகையில் உரிய முன்மொழிவுகளை அனுப்பி வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. கோவில்களில் அன்றாட வழிபாடு, நிர்வாக மேம்பாடு வழிபடுவோரின் நலன் ஆகியவற்றை கருத்தில் கொண்டு கோவில்களுக்கு அவசியமான தவிர்க்க முடியாத பணியிடங்களை நிறைவு செய்து கொள்ளவும் இதற்கான உதவித்தொகை நிர்ணய வருமானத்தில் குறிப்பிட்ட விழுக்காட்டுக்கள் வரை பணியாளர்கள் சம்பள செலவு அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்த இவகரகங்கள் அணைத்து பட்டியலில் சேர்ந்த மற்றும் பட்டியல் சேராத கோவில் நிர்வாகிகளுக்கு தெரிவித்து தகுந்த அறிவுரைகளை வழங்கி கோவில்களில் நிர்வாக நலனை கருத்தில் கொண்டு காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. தற்போது காலி பணியிடங்களை நிரப்பி கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் முறைகேடு நடக்கும் என்கின்றனர்.