ஜனவரி 11 முதல் மீண்டும் பள்ளிகள் திறப்பு – அரசு அறிவிப்பு!!!
இலங்கையில் புதிதாக நோய் தொற்று கண்டறியப்படாத நிலையில் வருகிற ஜனவரி 11-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.
பள்ளிகள் திறப்பு:
இலங்கையில் கொரோனா நோய் அச்சம் காரணமாக பள்ளிகள் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டன. கடந்த ஏப்ரல் 30-ம் தேதியில் இருந்து தொற்று இல்லாததால் இலங்கையில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன பிறகு மீதும் தொற்று அதிகரிப்பதன் காரணமாக மூடப்பட்டன.இந்நிலையில், சமூகத் தொற்று ஏற்படாத நிலையில், புதிய தொற்று எதுவும் கண்டறியப்படாத சூழலில் ஜூலை மாதத்தில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால் கரோனாவால் இரண்டாம் அலை உருவாகும் என்று எச்சரிக்கப்பட்டது. இதனால் மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டு 6 முதல் 12 வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டது. தற்போது மீண்டும் ஜனவரி 11-ஆம் தேதி முதல் அணைத்து வகுப்பினருக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என இலங்கை அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
CBSE பொதுத்தேர்வுகள் எப்போது?? குழப்பத்தில் மாணவர்கள்- ஆன்லைனில் மாதிரி தேர்வு நடத்தும் பள்ளிகள்!!
இந்நிலையில் மேல் மாகாணத்தில் பள்ளிகளை மீண்டும் தொடங்குவது குறித்த இறுதி தீர்மானம் இன்று எடுக்கப்படும் என கூறப்பட்டது. இதற்கான தீர்மானத்தை கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் அறிவிப்பார் என கல்வி அமைச்சக செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா குறிப்பிட்டிருந்தார்.
இதுகுறித்து கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் கூறுகையில்,” மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர்த்த பிற பகுதிகளில், தரம் ஒன்று முதல் தரம் 5 வரையான வகுப்புக்கள் மற்றும் ஆரம்ப பாடசாலைகளை வரும் ஜனவரி 11ஆம் தேதி மீண்டும் தொடங்க தீர்மானிக்கப்ப்டுள்ளது” என்று கூறியுள்ளார்.