தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் மாதத்திற்கு தள்ளிவைப்பு – ஆசிரியர்கள் கோரிக்கை!!
பொதுத்தேர்வுகள்:
தமிழகத்தில் கொரோனா காரணமாக நடப்பு ஆண்டிற்கான பள்ளிகள் கடந்த ஜனவரி 19ம் தேதி முதல் தான் திறக்கப்பட்டது. இந்த வாரத்தில் வெளியான பொதுத்தேர்வு அட்டவணை படி, 12ம் வகுப்பு தேர்வுகள் மே 3ம் தேதி முதல் 21ம் தேதி வரை நடக்கிறது. தேர்வுக்கு குறைந்த அவகாசமே உள்ளதால் தேர்வை 2 வாரங்கள் தள்ளிவைக்குமாறு கல்வியாளர்கள் பலர் அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
பள்ளி மாணவர்களுடன் பிரதமர் மோடி இணையவழி கலந்துரையாடல் – மத்திய கல்வி அமைச்சர் தகவல்!!
ஆசிரியர்களின் கருத்து:
பள்ளிகள் திறந்து இன்னும் ஒரு மாதம் கூட முழுமையாகததால் மாணவர்கள் முழுமையான கற்றல் நிலைக்கு இன்னும் வரவில்லை. உள்மதிப்பீடு தேர்வில் பெரும்பாலான மாணவர்கள் 10க்கும் குறைவான மதிப்பெண்களை மட்டுமே பெற்றுள்ளனர். பாடத்திட்ட குறைப்பை பொறுத்த வரையில் ஒரு சில பாடங்களில் மட்டுமே 40% வரை பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளது. சில பாடங்களில் 20% வரை மட்டுமே பாடங்கள் நீக்கப்பட்டுள்ளது. தேர்தல் மற்றும் செயல்முறை தேர்வுகள் காரணமாக 10 முதல் 15 நாட்கள் கல்விப்பணி பாதிக்கப்படும்.
நடப்பு ஆண்டில் மற்ற தேர்வுகள் ஏதும் நடத்தப்படாமல் மாணவர்கள் நேரடியாக பொதுத்தேர்வுகளை சந்திக்க உள்ளதால் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. சுமார் 50,000 பேர் மட்டுமே எழுத உள்ள ஜேஇஇ தேர்வுக்காக 8.19 லட்சம் மாணவர்கள் வாழ்வை பணயம் வைக்க கூடாது. எனவே 12ம் வகுப்பு பொதுத்தேர்வை ஜூன் மாதத்துக்கு தள்ளி வைக்க வேண்டும் என்று பல கல்வியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
I am a student
Don’t want to postpond the exam
11th std student wants all pass in tamil nadu