பள்ளி மாணவர்களுடன் பிரதமர் மோடி இணையவழி கலந்துரையாடல் – மத்திய கல்வி அமைச்சர் தகவல்!!
‘பரீக்க்ஷா பே சர்ச்சா’ நிகழ்ச்சி:
பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கான இறுதித்தேர்வு பயத்தை பயக்கும் வகையில் பிரதமர் மோடி கடந்த 2018ம் ஆண்டு முதல் இறுதித்தேர்வு எழுதும் மாணவர்களுடன் “பரீக்க்ஷா பேசர்ச்சா” என்ற நிகழ்ச்சி மூலம் கலந்துரையாடி வருகிறார். வழக்கமாக மார்ச் மாதத்தில் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுடன் இந்த நிகழ்ச்சி நடைபெறும். நடப்பு ஆண்டில் கொரோனா தொற்றின் காரணமாக கலந்துரையாடல் நிகழ்ச்சி இணைய வழியில் நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கலைமாமணி விருதுகள் 2020 – தமிழக அரசு அறிவிப்பு!!
பிரதமரின் கருத்து:
இது குறித்து பிரதமர் மோடி நேற்று, “நமது துணிச்சல் மிக்க தேர்வு போராளிகள் தேர்வுக்கு தயாராக தொடங்கியுள்ளனர். இந்த வருடத்திற்கான ‘பரீக்க்ஷா பே சர்ச்சா 2021’ நிகழ்ச்சி ஆன்லைன் முறையில் நடக்க உள்ளது. இந்த முறை உலகம் முழுவதிலும் உள்ள மாணவர்கள் கலந்துரையாடலில் கலந்து கொள்ளலாம். சிரித்த முகத்துடன் மன அழுத்தமின்றி மாணவர்கள் தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார்.
கல்வி அமைச்சர்:
நான்காம் ஆண்டு ‘பரீக்க்ஷா பே சர்ச்சா’ நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பதிவு தொடங்கி விட்டது. மாணவர்கள் தாங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை ‘மை கவர்ன்மெண்ட்’ வலைதளத்தில் பதிவு செய்ய வேண்டும். தேர்வு செய்யப்பட்ட கேள்விகள் நிகழ்ச்சியின் போது வெளியிடப்படும். இதில் தேர்வு செய்யப்படுபவர்கள் நிகழ்ச்சியின் போது தாங்கள் இருந்த இடத்தில் இருந்தபடியே காணொளியில் பங்கேற்கலாம் என்று மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அவர்கள் தெரிவித்துள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்