தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு பணி உத்தரவு – மாவட்ட ஆட்சியர்!!
தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் எழுந்து வந்த நிலையில், விடுமுறை கேட்ட அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பு பணி வழங்கி தூத்துக்குடி கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா பணி:
கொரோனா இரண்டாம் அலை காரணமாக தமிழகத்தில் செயல்பட்டு வந்த அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. தவிர 1 முதல் 11 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்கள் தேர்வுகள் இல்லாமல் தேர்ச்சி பெற்றதாக மாநில அரசு அறிவித்திருந்தது. மேலும் +2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களுக்காக பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது.
TN Job “FB Group” Join Now
தற்போது மாநிலம் முழுவதும் கொரோனா பரவலின் தாக்கம் தீவிரமடைந்து வருவதால் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுத்தேர்வுகள் எழுதுவதற்காக மட்டும் மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டனர். தொடர்ந்து பள்ளிகளில் மாணவர்கள் வருகை இல்லாத காரணத்தால் தங்களுக்கும் கோடை விடுமுறை அறிவிக்க வேண்டும் என ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்து வந்தது. இந்நிலையில் கோடை விடுமுறை கேட்ட ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பு பணி வழங்கி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
மே 1 வரை இரவு 8 மணி முதல் இரவுநேர ஊரடங்கு – மாநில அரசு அறிவிப்பு!!
இது குறித்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் பிறப்பித்துள்ள உத்தரவில், ‘தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 24 ஆசிரியர்கள் கொரோனா தடுப்புக்கான பணியில் தினமும் 6 மணி நேரம் ஈடுபட வேண்டும்’ என தெரிவித்துள்ளார். இதே போல மற்ற மாவட்டங்களிலும் உள்ள ஆசிரியர்களை கொரோனா பணியில் அமர்த்த ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது என பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்னதாக ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள் அரசு பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என தலைமை செயலர் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.