மே 1 வரை இரவு 8 மணி முதல் இரவுநேர ஊரடங்கு – மாநில அரசு அறிவிப்பு!!

0
மே 1 வரை இரவு 8 மணி முதல் இரவுநேர ஊரடங்கு - மாநில அரசு அறிவிப்பு!!
மே 1 வரை இரவு 8 மணி முதல் இரவுநேர ஊரடங்கு - மாநில அரசு அறிவிப்பு!!
மே 1 வரை இரவு 8 மணி முதல் இரவுநேர ஊரடங்கு – மாநில அரசு அறிவிப்பு!!

அசாம் மாநிலத்தில் அதிகரித்து வரும் Covid-19 நோய்த்தொற்று காரணமாக அங்கு இரவு 8 மணி முதல் காலை 5 மணி வரை இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. இந்த கட்டுப்பாடுகள் மே 1 வரை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இரவு நேர ஊரடங்கு:

கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் நாடு முழுவதும் தீவிரமடைந்து வருகிறது. இதன் காரணமாக பல மாநிலங்களில் நோய் தடுப்பு நடவடிக்கையாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. தவிர உணவகங்கள், சுற்றுலா, மத வழிபாட்டு தலங்கள், கடைகள், கடற்கரைகள் போன்றவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

அதே நேரத்தில் அசாம் மாநிலத்தில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமடைந்து வருகிறது. அதனால் அம்மாநிலத்தில் மளிகை கடைகள், வணிக வளாகங்கள், பொதுப் போக்குவரத்து, திருமணங்கள், இறப்பு, மத வழிபாட்டு தலங்கள், கல்வி நிறுவனங்கள், அலுவலகங்கள் ஆகியவற்றிற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தவிர அசாம் மாநிலத்துக்கு வருபவர்களுக்கு கட்டாய தனிமைப்படுத்துதல் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு அலுவலகங்களில் 50% ஊழியர்களுக்கு பணி – அரசுக்கு கோரிக்கை!!

இந்நிலையில் அம்மாநிலத்தில் ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகளுடன் மேலுமாக இரவு நேர ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. அதன் படி மே மாதம் 1 ஆம் தேதி இரவு 8 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் மருத்துவம் உள்ளிட்ட சில அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!