ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு கல்வி உதவித்தொகை !!!
தமிழகத்தில் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட இருப்பதாக பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகத்திடம் இருந்து ஒரு புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள்
கல்வி உதவித்தொகை திட்டம் !
பள்ளிகள், கல்லூரிகள் போன்றவற்றில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு அரசு துறைகள் மற்றும் கல்வி வாரியங்கள் சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்படுவது வழக்கம். அதன்படி தற்போது தமிழ்நாடு தேசிய ஆசிரியர் நல நிதியத்திலிருந்து ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட இருப்பதாக ஒரு புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதாவது தொழிற்கல்வி பயிலும் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு இந்த 202-2021ம் கல்வியாண்டிற்கான கல்வி உதவித்தொகை வழங்க இருப்பதாக தமிழ்நாடு தேசிய ஆசிரியர் நல நிதியத்தின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த உதவித்தொகை, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு மட்டுமே பொருந்தும்.
விண்ணப்பங்கள் !!
இந்த உதவித்தொகை பெற விருப்பமுள்ளவர்கள் 31.01.2021 அன்றுக்குள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து பள்ளிக் கல்வி இயக்குநர், பள்ளிக் கல்வி இயக்ககம், சென்னை – 6 என்ற முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பிட வேண்டும்.
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |