இந்த ஆண்டு தென்மேற்குப் பருவ மழை – ஜூன் 1 முதல் துவக்கம்!!
இந்த ஆண்டுக்கான பருவமழை ஜூன் 1 ஆம் தேதி முதல் கேரளாவில் இருந்து துவங்கும் என மத்திய புவி அறிவியல் துறை அமைச்சகத்தின் செயலர் ராஜீவன் தெரிவித்துள்ளார்.
தென்மேற்கு பருவ மழை:
தமிழகத்தில் சில நாட்களுக்கு முன்னதாக துவங்கிய அக்னி நட்சத்திரம் தற்போது சுட்டெரித்து வருகிறது. இந்த வெயில் காலங்களில் மக்கள் அதிகளவு வெளியே நடமாடுவதை தவிர்க்கும் படியும் வானிலை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். வழக்கமாக ஏப்ரல் மாத கடைசியில் துவங்கும் கோடை வெயில் ஜூன் மாதம் துவக்கம் வரை காணப்படும். அந்த காலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதும் உண்டு. இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக கோடை வெயில் துவங்கும் முன்னதாகவே, மார்ச் மாதத்திலேயே வெயில் சுட்டெரிக்க ஆரம்பித்தது.
TN Job “FB Group” Join Now
பொதுவாக கோடை காலங்களில் உஷ்ணத்தை தணிக்க குளிர் பிரதேசங்களுக்கு மக்கள் சுற்றுலா செல்வது வழக்கம். அதை விட இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக சுற்றுலா தலங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இந்த வெயிலின் தாக்கத்தை உணர்ந்த மக்கள் தற்போது வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கோடை மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் வெயிலின் தாக்கம் இன்றி சற்று ஆறுதலாக காணப்படுகின்றனர்.
தமிழகத்தில் தற்போதைய ஆக்சிஜன் இருப்பு – முதல்வர் முக ஸ்டாலின் ஆலோசனை!!
இதை தொடர்ந்து இந்த ஆண்டுக்கான பருவ மழை ஜூன் 1 ஆம் தேதி துவங்கும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய புவி அறிவியல் துறை செயலர் ராஜீவன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், ‘இந்த ஆண்டு ஜூன் மாதம் 1 ஆம் தேதி முதல் கேரளாவிலிருந்து பருவமழை துவங்கும். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வானிலை ஆய்வு மையத்திலிருந்து வெளியாகும். தொடர்ந்து மே மாதம் 31 ஆம் தேதி அன்று, இந்த ஆண்டுக்கான பருவமழை எந்த அளவுக்கு இருக்கும் என்பது குறித்தும் அறிவிப்பு வெளியிடப்படும்’ என தெரிவித்துள்ளார்.