தமிழகத்தில் 1ம் வகுப்பு முதல் 4ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறப்பு? குழப்பத்தில் அரசு!!
தமிழகத்தில் 1 முதல் 4 ம் வகுப்பு வரை பள்ளிகளை திறப்பது குறித்து முடிவெடுப்பதில் பள்ளிக்கல்வித்துறை குழப்பமடைந்துள்ளது.
பள்ளிகள் திறப்பு :
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஒரு வருடங்களுக்கும் மேலாக பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளது. இதற்கிடையில் அரசு நோய் தடுப்பு பணிகளை மேற்கொண்டு தொற்றை கட்டுப்படுத்தி வருகிறது. இதனால் நீண்ட நாட்களுக்கு பிறகு முதல் கட்டமாக பள்ளிகள் திறக்கப்பட்டு நோய் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளுடன் சுழற்சி முறையில் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு வருகிறது.
CryptoTech மூலம் 8 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம் – அறிக்கை தகவல்!
இந்த நிலையில் 1 முதல் 8 ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து பள்ளி கல்வித்துறை ஆலோசனை நடத்தி வருகிறது. முதலில் 6 முதல் 8 ம் வகுப்பு வரை பள்ளிகளை திறப்பது குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இதனால் அடுத்த கட்டமாக 6 முதல் 8 வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் விரைவில் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு சத்துணவு – நீதிமன்றம் உத்தரவு!
இந்த நிலையில் 1 ம் வகுப்பு முதல் அனைத்து வகுப்புகளையும் திறக்க அனுமதிக்க வேண்டும் என தனியார் பள்ளிகள் கோரிக்கை விடுத்தும் பெற்றோர் மத்தியில் இன்னும் அச்சம் விலகவில்லை என்று கூறியுள்ளார். மேலும் கொரோனா தொற்று முழுமையாக குறையாத நிலையில் தொடக்க நிலை வகுப்புகளான 1 முதல் 4 ம் பள்ளிகளை திறப்பது குறித்து முடிவெடுப்பதில் பள்ளிக்கல்வித்துறை குழப்பமடைந்த உள்ளது. அடுத்த மாதம் தமிழகத்தில் உள்ள 5ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.