CryptoTech மூலம் 8 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம் – அறிக்கை தகவல்!
இந்தியாவில் கிரிப்டோ இண்டஸ்ட்ரி தொழிலில் தற்போது சுமார் 50,000 பேர் பணிபுரிகின்ற நிலையில், 2030ம் ஆண்டுக்குள் இந்த துறையில் அதிக முதலீடுகள் மற்றும் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கிரிப்டோ இண்டஸ்ட்ரி:
கிரிப்டோ இண்டஸ்ட்ரி தொழிலில் தற்போது நாடு முழுவதும் சுமார் 50,000 பேர் பணிபுரிகின்றனர். இந்தியாவில் கிரிப்டோ இண்டஸ்ட்ரி, தகவல் தொழில் நிறுவனமான நாஸ்காம், கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்ச் வாசிர்எக்ஸ் உடன் இணைந்து, இதற்கான சந்தை இரண்டு மடங்கு அதிக வேகத்தில் வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், 2030 க்குள் 8,00,000 வேலை வாய்ப்புகளை உருவாக்கும் திறன் கொண்டது. இது தொடர்பாக, Bitcoin, Ethereum Polygon போன்ற கிரிப்டோகரன்ஸிகளில் அதிக அளவில் முதலீடு செய்யப்படுகிறது.
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு சத்துணவு – நீதிமன்றம் உத்தரவு!
இந்த தொழில்நுட்பங்களுக்கான தேவையை அதிகரிப்பதால், 2030 க்குள் 8 லட்சத்துக்கும் அதிகமான மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய CryptoTech தொழிற்துறையை இது அதிகரிக்கும் என்று அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த துறையில் முதலீடுகள் மற்றும் செலவு சேமிப்பு வடிவத்தில் 184 பில்லியன் டாலர் பொருளாதார மதிப்பு கூட்டலை உருவாக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கையின்படி, கிரிப்டோ டெக் துறையில் இந்தியாவில் 230-க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றது.
தமிழக அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு செப். சம்பளம் – புதிய சிக்கல்!
சில்லறை முதலீட்டாளர்களால் கிரிப்டோ சொத்துக்களில் சுமார் 6.6 பில்லியன் டாலர்கள் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளது. கிரிப்டோ தொழில்நுட்பங்களுக்கான ஒரு ஆலோசனை மற்றும் செயல்படும் ஒழுங்குமுறை அணுகுமுறை இந்தியாவில் கிரிப்டோடெக் சுற்றுச்சூழல் மற்றும் புதுமை வளர்ச்சிக்கு உதவும் என்று NASSCOM இன் தலைவர் தேப்ஜனி கோஷ் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.