தமிழக அரசு பள்ளிகளுக்கு விடுமுறை – முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு!!
சட்டமன்ற தேர்தல்:
தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் என தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்துள்ள நிலையில், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். வழக்கமாக தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். இந்த ஆண்டு தேர்தல் பணிகளுக்கு நான்கு கட்ட பயிற்சி வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலை மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – வெளியீடு!!
தேர்தல் பணிகள்:
சட்டசபை தேர்தலின் போது பொதுவாக மாநிலத்தில் உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், காவலர்கள், முன்னாள் எல்லைப்படை வீரர்கள் போன்றவர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள். தேர்தல் பணிகளில் ஈடுபட இருக்கும் பணியாளர்களின் பெயர் பட்டியலை தேர்தல் ஆணையம் தயாரித்து விட்டது. தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ள பணியாளர்களுக்கு தேர்தல் ஆணையம் தேர்தல் பணிகள் தொடர்பான பயிற்சிகளை வழங்கும்.
விடுமுறை அறிவிப்பு:
தமிழகத்தில் முதல் கட்ட தேர்தல் பயிற்சி வகுப்புகள் மார்ச் 18ம் தேதி நடந்து முடிந்த நிலையில் நாளை இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்புகள் சேலம் மாவட்டத்தில் நடக்க இருக்கிறது. அம்மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் நாளை பயிற்சி முகாமில் கலந்து கொள்ள இருக்கின்றனர். இதனால் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்