தமிழகத்தில் 40% பாடத்திட்டங்கள் குறைப்பு – எந்தெந்த வகுப்புகள் ???
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதில் தாமதம் ஏற்பட்டு வருவதால், மாணவர்களின் சிரமத்தை போக்க 40% பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டு உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.
பள்ளிகள் திறப்பு :
கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக தமிழகத்தில் கடந்த 5 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன. பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போதிலும் பள்ளிகள் இன்னும் திறந்தபாடில்லை. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக அரசு சார்பில் தொலைக்காட்சி வாயிலாக வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் ஆன்லைன் மூலமாக பள்ளிகளும் தங்கள் மாணவர்களுக்கு வகுப்புகளை எடுத்து வருகின்றன.
தமிழகத்தில் தொற்றின் தாக்கம் இன்னும் குறையாததினால் பள்ளிகள் திறப்பிக்கு இன்னும் கால தாமதம் ஏற்படும் என்றே தெரிகிறது. இதனால் பாடத்திட்டங்களை குறைக்க தமிழக அரசு சார்பில் குழு ஒன்று அமைக்கப்பட்டது.
பாடத்திட்டங்கள் குறைப்பு !!
தமிழக அரசின் அக்குழுவின் அறிக்கையின் பேரில் பாடத்திட்டங்கள் குறைப்பு பணிகளும் நடைபெற்று முடிந்துள்ளதாகவும், தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு வரை குழு அறிக்கையின் பேரில் 40% பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டு உள்ளதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார். மேலும், நீட் தேர்வில் 90% கேள்விகள் மாநில பாடத்திட்டத்தில் இருந்தே கேட்கப்பட்டு உள்ளதாக தெரிவித்த அமைச்சர், எத்தகைய போட்டித்தேர்வு வந்தாலும் அதனை எதிர்கொள்ளும் வகையில் பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்