தமிழகத்தில் ஆசிரியர், மாணவர்கள் பள்ளிக்கு வர அனுமதி இல்லை – இந்த அறிகுறி இருந்தால்!
தமிழகத்தில் சில மாவட்டங்களில் மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. எனவே உடல் வெப்பநிலை அதிகமாக இருக்கும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை பள்ளிகளில் அனுமதிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்:
கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலை என நாடு முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து மாநில வாரியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. நாளுக்கு நாள் நோய்த்தொற்றின் தாக்கம் தீவிரமடைந்து உயிரிழப்புகள் எண்ணிக்கை அதிகமானதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனை தொடர்ந்து ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டது. தற்போது நாடு முழுவதும் கொரோனா பரவலின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது.
இந்தியாவில் 3வது அலை தொடக்கம்? ஒரே நாளில் 43,263 பேருக்கு தொற்று! 338 பேர் பலி!
ஆன்லைன் வகுப்புகள் மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு திருப்தி அளிக்காத காரணத்தால் பள்ளிகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. தமிழகத்தில் செப்டம்பர் 1ம் தேதி முதல் 9, 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு சுழற்சி முறையில் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது பள்ளிகள் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இயங்கி வரும் நிலையில் தமிழகத்தின் சில மாவட்டங்களில் உள்ள பள்ளி மாணவர்கள் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
தலைமை ஆசிரியருக்கு கொரோனா தொற்று – பள்ளிக்கு 2 நாட்கள் விடுமுறை!
அதனை தொடர்ந்து மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு பாதுகாப்பு நெறிமுறைகளை தீவிரமாக பின்பற்றும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஆசிரியர் மற்றும் மாணவர்களின் உடல் வெப்பநிலை அதிகமாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் பள்ளி வளாகத்திற்குள் அனுமதிக்க கூடாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை தவிர பள்ளிகளுக்குள் வேறு எவரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என கூறப்பட்டுள்ளது.