இந்தியாவில் 3வது அலை தொடக்கம்? ஒரே நாளில் 43,263 பேருக்கு தொற்று! 338 பேர் பலி!
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையால் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 43,263 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 338 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்புகள் :
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையால் கடந்த 24 மணி நேரத்தில் 43,263 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,31,39,981ஆக அதிகரித்துள்ளது. தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும் தொற்றை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை இந்த நிலையில் நாட்டில் புதிதாக 338 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 4,41,749 ஆக உயர்ந்துள்ளது. அதிகரிக்கும் தொற்றை குறைக்கும் முயற்சியாக 18 வயது மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கட்டுப்பாடுகள் – காவல்துறை எச்சரிக்கை!
இந்தியாவில் இதுவரை 71,65,97,428 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் மூன்றாம் அலை குழந்தைகளை தாக்கும் என்ற எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளதால் குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு இறுதி கட்ட பரிசோதனையில் உள்ளது. இம்மாத இறுதியில் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மூன்றாம் அலையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 குறைவு – இன்றைய விற்பனை!
இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 40,567 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியா முழுவதும் 3,23,04,618 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதனை தொடர்ந்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 3,93,614 மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் உள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.