TN பொதுத்தேர்வு மாணவர்கள் EMIS விவரங்கள்.. தலைமையாசிரியர்களுக்கு இறுதி வாய்ப்பு – CEO அறிவுறுத்தல்!
தமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நெருங்க உள்ள நிலையில் தேர்வு எழுதும் மாணவர்களின் விவரங்களை சரிபார்க்க பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
பொதுத்தேர்வு:
தமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 2022 – 2023 ம் கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வு மார்ச் மாதம் முதல் தொடங்கவுள்ளது. வகுப்பு வாரியாக பள்ளிக்கல்வித்துறை தேர்வு கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதன்படி, 12ம் வகுப்பிற்கு மார்ச் 13ம் தேதி தேர்வுகள் தொடங்கவுள்ளது. அதனை தொடர்ந்து 11ம் வகுப்புக்கு மார்ச் 14ம் தேதியும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு ஏப். 6ம் தேதி அன்றும் பொதுத்தேர்வு தொடங்கவுள்ளது.
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வாட்டி வதைக்க போகும் வறண்ட வெப்பநிலை – வானிலை மையம் தகவல்!
இந்த நிலையில் பொதுத்தேர்வு எழுதவுள்ள 10ம் வகுப்பு மாணவர்களின் விவரங்களை சரிபார்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறையின் EMIS இணையதளத்தில் பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் குறித்த விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில் தற்போது 10ம் வகுப்பு மாணவர்களின் விவரங்களில் ஏதேனும் திருத்தம் இருந்தால் அதனை மேற்கொள்ள இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
அதன்படி பள்ளி தலைமையாசிரியர்கள் 10ம் வகுப்பு மாணவ, மாணவிகளின் பெயர், பெற்றோர் பெயர், முகவரி, பிறந்த தேதி உள்ளிட்ட அனைத்து விவரங்களை சரிபார்த்து பிப். 25ம் தேதிக்குள் EMIS இணையதளத்தில் தேவையான திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
Exams Daily Mobile App Download