தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வாட்டி வதைக்க போகும் வறண்ட வெப்பநிலை – வானிலை மையம் தகவல்!

0
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வாட்டி வதைக்க போகும் வறண்ட வெப்பநிலை - வானிலை மையம் தகவல்!
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வாட்டி வதைக்க போகும் வறண்ட வெப்பநிலை - வானிலை மையம் தகவல்!
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வாட்டி வதைக்க போகும் வறண்ட வெப்பநிலை – வானிலை மையம் தகவல்!

தமிழகத்தில் கோடை காலம் அடுத்த மாதம் தொடங்க இருக்கும் நிலையில் தற்போது பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவி வருகிறது. இந்த நிலையில் அடுத்த 5 நாட்களுக்கான வானிலை நிலவரம் குறித்த அறிக்கையை சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ளது.

வானிலை தகவல்

தமிழகத்தில் குளிர்காலம் முடிவடைய இருக்கும் நிலையில், பெரும்பாலான இடங்களில் அதிகாலை வேளையில் மட்டும் லேசான பனிப்பொழிவும், பகல் நேரங்களில் வறண்ட வானிலையும் நிலவி வருகிறது. இதையடுத்து தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று முதல் 26ம் தேதி வரையிலான வானிலை நிலவரம் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் அங்கீகாரம் பெறாத பள்ளி மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத அனுமதி- தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு!

இந்த அறிக்கையில், இன்று முதல் 26ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, சென்னை மற்றும்‌ புறநகர்‌ பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படுவதுடன், குறைந்தபட்சமாக 22-23 டிகிரி முதல் அதிகபட்சமாக 34 டிகிரி செல்சியஸ்‌ வரை வெப்பநிலை இருக்கக்கூடும்‌ என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

மேலும் மீனவர்களுக்கான எச்சரிக்கை குறித்து ஏதும் அறிக்கையில் இடம்பெறவில்லை.

Exams Daily Mobile App Download

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!