தமிழகத்தில் அங்கீகாரம் பெறாத பள்ளி மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத அனுமதி- தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு!

0
தமிழகத்தில் அங்கீகாரம் பெறாத பள்ளி மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத அனுமதி- தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் அங்கீகாரம் பெறாத பள்ளி மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத அனுமதி- தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் அங்கீகாரம் பெறாத பள்ளி மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத அனுமதி- தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 10, 11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு குறித்த அறிவிப்பு வெளியான நிலையில், அங்கீகாரம் பெறாத பள்ளி மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத தேர்வுத்துறை அனுமதி வழங்கி இருக்கிறது.

பொதுத்தேர்வு அறிவிப்பு

தமிழகத்தில் 2022-23 கல்வியாண்டில் மாநில அரசின் பாட திட்டத்தின் கீழ் 10,11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு குறித்த அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை சில மாதங்களுக்கு முன் வெளியிட்டது. அதன் படி 12 ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு மார்ச் 13 ஆம் தேதி முதலும், 11 ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு மார்ச் 14 ஆம் தேதியும், 10 ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு ஏப்ரல் 6 ஆம் தேதியும் தொடங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுதேர்விற்கான ஏற்பாடுகள் அனைத்து பள்ளிகளிலும் நடைபெற்று வருகிறது.

சென்னையில் இன்று இலேசான நில அதிர்வு – மெட்ரோ நிர்வாகம் காரணமா? நிர்வாகம் கொடுத்த விளக்கம்!

மேலும் பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் பட்டியல் வெளியாகி இருக்கிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சுமார் 25 லட்சம் மாணவர்கள் இந்த ஆண்டு தேர்வு எழுத இருக்கின்றனர். இந்நிலையில் கடந்த ஆண்டு அங்கீகாரம் பெறாத அல்லது, அங்கீகார விண்ணப்பம் அளித்து, சில குறைபாடுகள் உள்ள பள்ளிகளில் பொதுத் தேர்வு எழுத அனுமதி வழங்கப்படவில்லை. இந்த ஆண்டும் அந்த பள்ளிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்படவில்லை. இந்நிலையில் அந்த பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பொதுத்தேர்வு எழுத சிறப்பு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

Follow our Instagram for more Latest Updates

மேலும் அந்த மாணவர்கள் அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் ஒதுக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில் தேர்வு எழுதுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கீகாரம் பெறாத பள்ளிகள்,அங்கீகாரத்தை நீட்டித்தல், அங்கீகாரத்தை புதுப்பித்தல், புதிதாக விண்ணப்பித்தல் போன்ற பணிகளை அரசின் வழிமுறைகளின் படி சரியான முறையில் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருப்பதாக தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Exams Daily Mobile App Download

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!