தமிழகத்தில் அக்.1 முதல் பள்ளிகள் திறக்கப்படுமா ?? – அரசாணை நிறுத்தி வைக்க முதல்வர் உத்தரவு !
தமிழகத்தில் அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று வெளியிடப்பட்டிருந்த அரசாணையினை தற்போது நிறுத்தி வைப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார். கொரோனா பரவல் அதிகரித்து வருவதனால் இந்த முடிவு எடுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகிறது. இது குறித்து மருத்துவக் குழுவுடன் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும் எனவும் முதல்வர் கூறியுள்ளார்.
தமிழகத்தில் செப்டம்பர் 30ம் தேதியுடன் (நாளை) ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வரும் நிலையில் அதனை மேலும் சில தளர்வுகளுடன் நீட்டிப்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளிக்காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.
இதில் தடுப்பு நடவடிக்கைகள், என்னென்ன கூடுதல் தளர்வுகள் வழங்கலாம் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. தற்போதுள்ள சூழலில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதனால் பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக தமிழகத்தில் அக்டோபர் 1 முதல் 10 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அவர்களின் விருப்பத்தின் பேரில் பள்ளிக்கு வர அனுமதி அளிக்கப்பட்டு வெளியிடப்பட்ட அரசாணை நிறுத்திவைக்கப்பட்டு உள்ளது. பள்ளிகள் திறப்பு குறித்து இன்று பிற்பகல் 3 மணிக்கு மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசித்த பிறகு முடிவு எடுக்கப்படும் எனவும் முதல்வர் உரையில் கூறியுள்ளார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்