தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் ? – உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி
தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று உயர்நீதிமன்றம் சரமாரியாக தமிழக அரசிற்கு கேள்விகளை எழுப்பி உள்ளது. மேலும் தமிழக அரசு பதில் அளிக்கவும் உத்தரவிட்டு உள்ளது. இது குறித்த மேலும் விரிவான தகவல்களை அறிந்து கொள்ள எங்கள் வலைத்தளத்தினை அணுகலாம்.
பொது முடக்கம் !
கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டது. பள்ளிகள் கல்லூரிகள் உட்பட அனைத்து கல்வி நிறுவங்களும் விதிவிலக்கில்லாமல் மூடப்பட்டது. மாணவர்களுக்கு தேர்வுகள் கூட நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.
மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் கூட நடத்தப்படாமல் முந்தைய தேர்வுகளின் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்பட்டு ஆல்பாஸ் முறை கடைபிடிக்கப்பட்டது. மேலும் அடுத்த கல்வி ஆண்டும் தொடங்கியதால் மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்பட்டது. பல தனியார் பள்ளிகளில் தற்போது மாணவர்களுக்கு ஆன்லைனிலேயே தேர்வுகளும் நடத்தப்பட்டது.
பாடத்திட்டம் குறைப்பு !
புதிய கல்வியாண்டு தொடங்கி 4 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் இன்னும் பள்ளிகள் திறக்கப்படாமலேயே உள்ளது. இதற்கிடையில் மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் முதலில் 30% ஆகவும் பின்னர் 40% ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. தேர்வு வருவதற்குள் மொத பாடங்களையும் நடத்தி முடிக்க முடியாது என்பதனால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மத்திய அரசு அனுமதி !
மத்திய அரசும் ஊரடங்கு தளர்வுகளில் பள்ளிகளை திறந்து கொள்ள அனுமதி அளித்து அந்தந்த மாநில அரசுகள் முடிவு செய்து கொள்ள அனுமதி அளித்துள்ளது. இருப்பினும் தமிழக அரசு பள்ளிகளை திறப்பதற்கு நேரம் இதுவல்ல என்று பள்ளிகள் திறப்பினை தள்ளி வைத்துள்ளது.
இந்நிலையில் தற்போது தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது என தமிழக அரசிற்கு உயர்நீதிமன்றமானது சரமாரியாக கேள்விகளை எழுப்பி உள்ளது. பள்ளிகள் திறப்பது எப்போது என்பதற்கு வரும் நவம்பர் 01 ஆம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்