சிறப்பு வகுப்புகள் நடத்தினால் பள்ளி அங்கீகாரம் ரத்து – தமிழக அரசு அதிரடி உத்தரவு !!!!

0
சிறப்பு வகுப்புகள் நடத்தினால் பள்ளி அங்கீகாரம் ரத்து
சிறப்பு வகுப்புகள் நடத்தினால் பள்ளி அங்கீகாரம் ரத்து

சிறப்பு வகுப்புகள் நடத்தினால் பள்ளி அங்கீகாரம் ரத்து – தமிழக அரசு அதிரடி உத்தரவு !!!!

கொரோனா வைரஸ் பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால், அதன் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை எச்சரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் காரணமாக பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வுகள் தவிர்த்து மற்ற எந்த வகுப்பும் எடுக்கக்கூடாது என்று திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சில தனியார் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளில் மறைமுகமாக சிறப்பு வகுப்புகள் எடுப்பதாக பள்ளிக்கல்வித்துறைக்கு புகார்கள் வந்தன.

அரசுத்தேர்வுகள் ஒத்திவைப்பு! முழு பட்டியல்

இந்த நிலையில், பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால், சம்பந்தப்பட்ட பள்ளி அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை எச்சரித்துள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை சார்பில், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகத்தினர் முழு ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு சிறப்பு வகுப்புகள் நடத்தும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும். மேலும், சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகிகள் மீது தொற்றுநோய் பரவல் தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்புள்ளது. இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!