தமிழக பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு – பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஜனவரி 14 முதல் 18ஆம் தேதி வரை பொங்கல் பண்டிகை ஒட்டி விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளிக் கல்வித் துறை ஆனது முக்கிய அறிவிப்பு ஒன்றை தெரிவித்துள்ளது.
பொது தேர்வு:
தமிழக அரசு பொங்கல் பண்டிகை ஒட்டி பள்ளி, கல்லூரிகளுக்கு ஜனவரி 14ஆம் தேதி முதல் ஜனவரி 18ஆம் தேதி வரை விடுமுறை அளித்துள்ளது. பொதுவாகவே பொங்கல் பண்டிகைக்கு நான்கு முதல் ஐந்து நாட்கள் தொடர் விடுமுறை வரும் என்பதால் மாணவர்கள் முதல் பணிக்கு செல்லும் ஊழியர்கள் வரை அனைவரும் தொடர் விடுமுறையை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருப்பார்கள். ஆனால் இம்முறை போகி மற்றும் தை முதல் நாள் பொங்கல் பண்டிகையானது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வந்துள்ளதால் கிடைக்க வேண்டிய விடுமுறைகள் தவறிவிட்டதாக வருத்தத்தில் இருந்தனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கான 18 மாத அகவிலை நிலுவைதொகை? – விரைவில் வெளியாகும் அறிவிப்பு!
இதனால் மக்களின் மனக்குறையை போக்கும் விதமாக தமிழக அரசானது ஜனவரி 14 போகி, ஜனவரி 15 தை முதல் நாள் பொங்கல், ஜனவரி 16 மாட்டுப் பொங்கல், 17 ஆம் தேதி காணும் பொங்கல் என்று நான்கு நாட்களுக்கு விடுமுறை அளிக்க இருந்தது. ஆனால் பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வருவதற்கு போக்குவரத்து நெரிசல் அதிக அளவில் இருப்பதால் கூடுதலாக விடுமுறை தினத்தை எதிர்பார்த்தனர்.
இதனால் தமிழக அரசு ஆனது ஜனவரி 18ஆம் தேதியை பொது விடுமுறை தினமாக அறிவித்து உள்ளது. பள்ளி மாணவர்கள் விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிக்கு ஜனவரி 19ஆம் தேதி திரும்புவார்கள். அதன் பிறகு மார்ச் மாதத்தில் 10 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் தொடங்க உள்ளது. இதற்காக பிப்ரவரி மாதத்தில் செய்முறை தேர்வுகள் நடக்க உள்ளதால் இதன் பிறகு மாணவர்களுக்கான தொடர் விடுமுறைகள் எதுவும் இருக்காது என்று என்பது குறிப்பிடத்தக்கது.
நடப்பாண்டு தமிழகத்தில் 18.8 லட்சம் மாணவர்கள் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதனால் பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள் தேர்வுக்கு தயாராகும் படி பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.