தமிழகத்தில் அக்டோபர் 14 முதல் சான்றிதழ்கள் வழங்கப்படும் !- பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு !!!

0
தமிழகத்தில் அக்டோபர் 14 முதல் சான்றிதழ்கள் வழங்கப்படும் !
தமிழகத்தில் அக்டோபர் 14 முதல் சான்றிதழ்கள் வழங்கப்படும் !

தமிழகத்தில் அக்டோபர் 14 முதல் சான்றிதழ்கள் வழங்கப்படும் ! – பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு !!!

தமிழகத்தில் வரும் அக்டோபர் மாதம் 14 ஆம் தேதி முதல் பள்ளி மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும் என தமிழக பள்ளிக் கல்வித்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. அது குறித்த செய்திகளை கீழ வழங்கியுள்ளோம்.

தமிழகத்தில் கொரோனா அச்சம் காரணமாக அணைத்து பள்ளிகளும் மூடப்பட்டு தேர்வுகள் யாவும் ரத்து செய்யப்பட்டாலும் 12 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் ஊரடங்கிற்கு முன்னரே தேர்வு நடந்து முடிந்து விட்டது. இதில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதி தேர்வினை மட்டும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களால் எழுத முடியவில்லை அவர்களுக்கு மற்றும் தனித்தேர்வு நடத்தப்பட்டது.

மேலும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடைசி தேர்வு நடைபெறவே இல்லை. அவர்களுக்கு முந்தைய தேர்வுகளின் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அவர்களுக்கான விடைத்தாள் நகல் போன்றவை அகடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களிலேயே வழங்கப்பட்டு விட்டது.

தற்போது வரும் அக்டோபர் மாதம் 14 ஆம் தேதி முதல் 11, 12 மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும் என தமிழக பள்ளிக் கல்வித்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. மாணவர்கள் பள்ளியிலும் தனித்தேர்வர்கள் தேர்வு மையங்களிலும் தங்களின் சான்றிதழ்களை பெற்று கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!