தமிழக ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – இன்று குறைதீர்ப்பு முகாம்!
தமிழகத்தில் ரேஷன் அரிசி கடத்தல் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க உணவு வழங்கல் துறை அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
ரேஷன் அரிசி கடத்தல்:
தமிழகத்தில் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசியை மற்ற மாநிலங்களுக்கு கடத்தும் நிகழ்வு அடிக்கடி நடந்து வருகிறது. இதனால் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒதுக்கப்பட்ட அரிசி கிடைக்காமல் போய் விடுகிறது. இந்த நிலையில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக அரிசி கடத்தல் குறித்து அரசுக்கு தொலைபேசி வாயிலாக புகார் தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் நாளை (ஜூன் 10) வேலைவாய்ப்பு முகாம் – வேலை தேடுவோர் கவனத்திற்கு!
இதன் மூலம் தற்போது அரிசி கடத்தும் நபர்கள் கண்டறியப்பட்டு வருகின்றனர். மேலும் ரேஷன் அட்டைதாரர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய மண்டலம் வாரியாக மாதந்தோறும் குறைதீர் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இன்று சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் ஜூன் மாதத்திற்கான குறைதீர்ப்பு முகாம் இன்று நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் ரேஷன் அட்டைதாரர்கள் புகார் தெரிவிக்கலாம். மேலும் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம்.