தமிழகத்தில் 25 ஆண்டுகள் சிறைக் காவலராக பணியாரியவர்களுக்கு பதவி உயர்வு – அரசிடம் கோரிக்கை!!!

0
தமிழகத்தில் 25 ஆண்டுகள் சிறைக் காவலராக பணியாரியவர்களுக்கு பதவி உயர்வு - அரசிடம் கோரிக்கை!!!
தமிழகத்தில் 25 ஆண்டுகள் சிறைக் காவலராக பணியாரியவர்களுக்கு பதவி உயர்வு - அரசிடம் கோரிக்கை!!!
தமிழகத்தில் 25 ஆண்டுகள் சிறைக் காவலராக பணியாரியவர்களுக்கு பதவி உயர்வு – அரசிடம் கோரிக்கை!!!

தமிழகத்தில் உள்ள சிறைகளில் 25 ஆண்டுகள் சிறைக் காவலர்களாக பணியாற்றியவர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று சிறைக்காவலர்கள் சார்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

தமிழக சிறை சாலைகள்:

தமிழகத்தில் உள்ள சிறைச்சாலைகளில் மொத்தம் 5,000 பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். மேலும், காவல்துறை, தீயணைப்பு துறை, சிறைச்சாலை துறை ஆகிய மூன்று துறைகளுக்கும் ஆள்சேர்ப்பு ஒரே முறையில் தான் நடத்தபடுகிறது. காவல் துறையில் தொடர்ந்து 15 ஆண்டுகள் பணியாற்றிய காவலர்களுக்கு தலைமை காவலர் பதவி உயர்வு வழங்கபடுகிறது.

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்கள் பட்டியல் – நாளை வெளியீடு!!

பதவி உயர்வு:

தீயணைப்பு துறையிலும் இதே போல் 25 ஆண்டுகள் தீயணைப்பு வீரராக பணியாற்றியவர்களுக்கு சிறப்பு நிலைய தீயணைப்பு அலுவலர் பதவி உயர்வு வழங்குவதற்கும் நடப்பு ஆண்டு பிப்ரவரி மாதம் 1ம் தேதி உத்தரவிடப்பட்டுள்ளது. சிறை துறையில் மட்டும் தலைமை காவலராக பணியாற்றியவர்கள் பதவி உயர்வு ஏதும் இல்லாமல் பணி ஓய்வு பெறுகின்றனர்.

TN Job “FB  Group” Join Now

கோரிக்கை:

நடப்பு ஆண்டில் சிறைத்துறையில் பணியாற்றியவர்கள் 50 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. மற்ற காவலர்கள் பணிமாறுதலுக்கு விண்ணப்பித்து உள்ளனர். பதவி உயர்வில் சிறைத்துறை காவலர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும், இதனை தவிர்த்து 25 ஆண்டுகளாக பணியாற்றிய தலைமை காவலர்களுக்கும் சிறப்பு உதவி சிறை அலுவலராக பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சிறை காவலர்கள் சார்பாக கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!