கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் தொடருமா?? – உயர்கல்வித்துறை செயலாளர் ஆலோசனை!!!
தமிழகத்தில் 12ம் வகுப்பை தவிர மற்ற வகுப்புகளுக்கு பள்ளிகள் விடுமுறை அறிவித்துள்ள நிலையில் கல்லூரிகளில் தொடர்ந்து நேரடி வகுப்புகளை நடத்தலாமா இல்லை, ஆன்லைன் வகுப்புகளை நடத்தலாமா என்பது குறித்து உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா இன்று ஆலோசனை கூட்டம் நடத்துகிறார்.
பள்ளிகள் விடுமுறை:
தமிழகத்தில் மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா தொற்றின் காரணமாக பள்ளிகளில் 12ம் வகுப்பை தவிர மற்ற அனைத்து வகுப்புகளுக்கும் மறுஅறிவிப்பு வரும் வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் 9, 10 மற்றும் 11ம் வகுப்புகளுக்கு விடுமுறை நாட்களில் ஆன்லைன் வகுப்புகளை நடத்தவும், கற்றல் திறன் தேர்வுகளும் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
கல்விக்கட்டணம் கேட்டு தனியார் பள்ளிகள் கெடுபிடி – பெற்றோர்கள் வருத்தம்!!
12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுக்கான நாட்கள் மிகவும் குறைவாக உள்ளதால் அவர்களுக்கு மட்டும் தொடர்ந்து பள்ளிகள் செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், 12ம் வகுப்பு மாணவர்களுக்கு சட்டமன்ற வாக்குப்பதிவு காரணமாக வேறு விடுமுறைகள் வழங்கப்படும். இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக் கூடாது என்பதால் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறுகிறது.
கல்லூரிகள் விடுமுறை:
தற்போது கொரோனா தொற்றின் தாக்கம் மிகவும் அதிகரித்து வரும் நிலையில் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவது குறித்து உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் அபூர்வா அவர்கள், பல்கலைக்கழக துணை வேந்தர்கள், உயர்கல்வித் துறை அதிகாரிகளுடன் இன்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்துகிறார்.
TN Job “FB Group” Join Now
ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் தொடர்ந்து கல்லூரிகளில் வகுப்புகளை நடத்துவது, செமஸ்டர் தேர்வுகளை நடத்தும் முறை, நேரடி வகுப்புகளை நடத்துவது முடிவு செய்யப்பட்டால் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போன்ற முக்கிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. ஆலோசனையின் அடிப்படையில் அடுத்தகட்ட அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்