தமிழகத்தில் ஜூன் 3ம் தேதி கரண்ட் இருக்காது – உங்க ஏரியா இதுல இருக்கானு தெரிஞ்சுக்கோங்க!
தமிழகத்தில் வேலூர் மாவட்டம் வடக்காத்தி பட்டி, பூஞ்சோலை உள்ளிட்ட சில பகுதிகளில் உள்ள துணை மின் நிலையங்களில் நாளை (ஜூன்.03) பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் மின்தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை:
தமிழகத்தில் மாவட்டம் வாரியாக மாதந்தோறும் தொடர்ந்து மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நாளை வேலூர் மாவட்டம் வடக்காத்திபட்டி, ஆம்பூர், ஒடுகத்தூர், மடையப்பட்டு, பூஞ்சோலை, சோமலாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக அத்துணைமின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. மின்தடை பகுதிகள் கீழ்வருமாறு.
தமிழகத்தில் பீடி, சிகரெட்டுக்கு தனி உரிமம் – அரசின் திடீர் அறிவிப்பு!
மின்தடை செய்யப்படும் பகுதிகள்:
மாதனூா், பிராமணமங்கலம், ஒதியத்தூா், உள்ளி, வேப்பூா், மேலாளத்தூா், கீழ்கிருஷ்ணாபுரம், கூடநகரம், கோப்பம்பட்டி, வளத்தூா், வடக்காத்திப்பட்டி, அகரம், பாலூா், ராஜபுரம், பள்ளிகுப்பம், கொல்லமங்கலம், குச்சிப்பாளையம், வரதலம்பட்டு, கரடிகுடி, டி.சி. குப்பம், ஒங்கப்பாடி, ஒடுக்கத்தூர், மேலரசம்பட்டு, ஓ.ராஜபாளையம், கீழ்கொத்தூா், ஆசனாம்பட்டு, சோ்பாடி, குருவராஜபாளையம், சின்னபள்ளிகுப்பம், வேப்பங்குப்பம், வண்ணாதங்கள், தீர்த்தம், முல்வாடி, கொட்டாவூர், சேமலாபுரம், ஆம்பூா் நகரம், ஏ-கஸ்பா, பி-கஸ்பா, சின்னகொம்மேஸ்வரம், வடபுதுப்பட்டு, பச்சகுப்பம், ஆலாங்குப்பம், சோலூா், தேவலாபுரம், வெங்கடசமுத்திரம், சான்றோா்குப்பம், ரால்லகொத்தூா், ஏ.எம். பள்ளி, ரெட்டித்தோப்பு, தார்வழி.