தமிழகத்தில் நாளை (ஜூலை.02) மின்தடையா? விளக்கம் இதோ!

0
தமிழகத்தில் நாளை (ஜூலை.02) மின்தடையா? விளக்கம் இதோ!
தமிழகத்தில் நாளை (ஜூலை.02) மின்தடையா? விளக்கம் இதோ!
தமிழகத்தில் நாளை (ஜூலை.02) மின்தடையா? விளக்கம் இதோ!

தமிழகத்தில் நாளை ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் துணை மின் நிலைய பராமரிப்பு பணிகள் ஏதும் நடைபெறாது. மறுநாள் திங்கட்கிழமை (ஜூலை. 03) மின்தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இப்பதிவில் காண்போம்.

மின்தடை:

தமிழக துணை மின் நிலையங்களில் மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் காரணமாக குறிப்பிட்ட பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும். இது குறித்து முன்கூட்டியே இணையதளம் மற்றும் நாளிதழ் வாயிலாக அறிவிப்பு செய்யப்படும். இந்த நிலையில் நாளை (ஜூலை.02) ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் மின்தடை குறித்த எந்த அறிவிப்புகளும் வெளியாகவில்லை. வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் நலன் கருதி மின்தடை செய்யப்படமாட்டாது.

ATM பில்களால் உயிருக்கே ஆபத்து.. வெளியான ஷாக் ரிப்போர்ட் – முழு விவரம்!

அதனால் திங்கட்கிழமை மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. தற்போதைய தகவலின் படி நாளை மறுநாள் நேதாஜி அப்பேரல் பார்க், வேலம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள துணை மின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. அதன் காரணமாக அத்துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!