தமிழக காவல்துறையினருக்கு கொரோனா தடுப்பு உபகரணம் – ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு!
தமிழகத்தில் காவல்துறையில் பணிபுரியும் காவலர்களில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுவோருக்கு நோய் தடுப்பு உபகரணம் வழங்க ரூ. 5 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டது தமிழக அரசு.
கொரோனா தடுப்பு உபகரணங்கள்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. ஒரு நாள் கொரோனா பாதிப்பாக 24 ஆயிரத்திற்கு அதிகமான பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் உயிரிழப்புகளும் அதிகமாக உள்ளன. இதனால் அரசு தரப்பில் ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாள் ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. மக்கள் ஊரடங்கு நேரத்தில் வெளியே வர கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
மேலும் இரவு பகல் பாராமல் பல போலீசார்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மாவட்ட எல்லைகளில் இ பாஸ் இல்லாமல் பயணம் செய்பவர்களின் வாகனங்கள் சோதனை செய்யப்படுகின்றனர். மேலும் கொரோனா தொற்று அதிகமுள்ள பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இவ்வாறு காவல் துறையினர் இரவு பகல் பாராமல் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் 18+ வயதினருக்கு கொரோனா தடுப்பூசி – 8,419 பேருக்கு செலுத்தப்பட்டது!!
இந்நிலையில் அவ்வாறு சேவை செய்யும் காவல்துறை நலனுக்காக கொரோனா பாதுகாப்பு உடைகளை வழங்க ரூ.5 கோடி நோய் தடுப்பு உபகரணம் வழங்க ரூ. 5 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு பாதுகாப்பு கவச உடை பிபிஐ கிட் (PPI KIT) கிருமி நாசினி, முகக்கவசங்களை அரசே வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.