தமிழகத்தில் 18+ வயதினருக்கு கொரோனா தடுப்பூசி – 8,419 பேருக்கு செலுத்தப்பட்டது!!
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி திட்டம் மூலமாக இதுவரை 30 மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் 18-44 வயதிற்குட்பட்ட மொத்தம் 11,80,798 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தடுப்பூசி திட்டம்:
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 4 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 3900க்கு அதிகமானோர் இறந்துள்ளனர். பல மாநிலங்களில் மருத்துவமனைகளில் போதிய வசதி இல்லாமல் நோய்யாளிகளுக்கு இடம் மறுக்கப்படுகிறது. மேலும் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாகவும் பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
நிலைமையை சரி செய்ய மத்திய அரசு 18 வயது நிரம்பிய அனைவருக்கும் மே மாதம் தடுப்பூசி வழங்கப்பட வேண்டும் என அதற்கான முன்பதிவிற்கு செயலி ஒன்றையும் அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் மூன்றாவது கட்டத்தின் படி இதுவரை 30 மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் 18 வயது முதல் 44 வயதுள்ள 11,80,798 பேருக்கு தடுப்பூசி முதல் தவணை செலுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 மாவட்டங்களில் மே 10 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!!
இந்த எண்ணிக்கை தமிழகத்தில் 8,419 ஆக உள்ளது. இன்று காலை கணக்கின்படி இந்தியாவில் மொத்தம் 24,11,300 அமர்வுகளில் 16,49,73,058 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. அதில் 10 மாநிலங்களை சேர்ந்தவர்கள் 66.84 சதவீதத்தினர் ஆவர். மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 23 லட்சத்திற்கு அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் 111-வது நாளான மே 6 ஆம் தேதி 23,70,298 தடுப்பூசி மருந்துகள் செலுத்தப்பட்டுள்ளன.