தமிழகத்தில் நர்சரி, பிரைமரி பள்ளிகள் திறப்பு – குறைதீர்வு கூட்டத்தில் கோரிக்கை!!
வேலூர் மாவட்டத்தில் நடந்த மக்கள் குறைதீர்ப்பு முகாமில் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு பள்ளிகள் நலச்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் மாவட்ட வருவாய் அலுவலரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.
குறைதீர்ப்பு முகாம்:
தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வாரம் திங்கள் கிழமையும் ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடக்கிறது. நேற்று வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்ப்பு முகாமிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் அவர்கள் தலைமை தாங்கினார். நேற்று மொத்தம் 271 மனுக்கள் பெறப்பட்டது.
மத்திய அரசின் தனியார்மயமாக்கல் நடவடிக்கை – 4 வங்கிகள் தேர்வு!!
பள்ளிகள் திறக்க கோரிக்கை:
குறைதீர்ப்பு முகாமில் தமிழ்நாடு நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள் நலச்சங்கத்தின் மாநில செயலாளர் விஜயகுமார் மற்றும் நிர்வாகிகள் மனு ஒன்றை அளித்தனர். அதில், கொரோனா காரணமாக கடந்த 11 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. 9 முதல் 12ம் வகுப்பு வரை மட்டுமே பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படவில்லை. இதனால் எங்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 1 முதல் 8ம் வகுப்புகளுக்கும், 2ம் கட்டமாக எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளுக்கும் பள்ளிகளை திறக்க அனுமதி வழங்க வேண்டும்.
1 முதல் 8 ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு சம்பளம் அளிக்க முடியவில்லை. மேலும், கட்டட வாடகை மற்றும் மின் கட்டணம் போன்ற செலவுகளையும் சமாளிக்க முடியவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அரசு பரிசீலித்து உடனடியாக நர்சரி, பிரைமரி பள்ளிகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்து இருந்தனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்