மத்திய அரசின் தனியார்மயமாக்கல் நடவடிக்கை – 4 வங்கிகள் தேர்வு!!
நாட்டின் பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு முதல் கட்டமாக 4 வங்கிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்று அரசுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தனியார் மயமாக்கல்:
நாட்டின் பொதுத்துறை வங்கிகளில் வாராக்கடன் நிலுவை தொகை அதிகரித்து வருவதால் பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்க முடிவு செய்திருப்பதாக நடப்பு ஆண்டின் பட்ஜெட் கூட்டத்தொடரில் மத்திய நிதி அமைச்சர் அறிவித்தார். பொதுத்துறை வங்கிகளில் அரசின் பங்குகள் தனியாரிடம் விற்கப்பட்டு அதன் மூலம் நிலுவைத்தொகையை ஈடு கட்ட அரசு முடிவு செய்தது.
‘மேட்’ நுழைவுத்தேர்வு விண்ணப்பம் – கால அவகாசம் நீட்டிப்பு!!
வங்கிகள் தேர்வு:
வங்கிகள் தனியார் மயமாக்கும் முயற்சியில் முதல் கட்டமாக 4 பொதுத்துறை வங்கிகளில் பங்குவிலகலை மேற்கொள்ள அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து உயர் அதிகாரி ஒருவர், “முதல் கட்டமாக பேங்க் ஆப் மஹாராஷ்டிரா, பேங்க் ஆப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் பேங்க், சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா ஆகிய 4 வங்கிகள் தனியார் மயமாக்களுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் 2 வங்கிகளின் பங்கு விலக்கல் நடவடிக்கையை அரசு மேற்கொள்ளும்.
சோதனை முயற்சியாக முதலில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வங்கிகளின் பங்கு விலக்கல் நடவடிக்கையை மேற்கொண்டு அதன் முடிவுகள் வெற்றி கரமாக அமைவதை கொண்டு அடுத்ததாக பெரிய வங்கிகளை தனியார் மயமாக்கும் முயற்சியில் அரசு ஈடுபடும். அதே நேரம் நாட்டின் முக்கிய வங்கியான எஸ்.பி.ஐ., வங்கியில், தன்னுடைய பெரும்பான்மையான பங்குகளை அரசே வைத்துக் கொள்ளும்” என்று தெரிவித்தார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
அரசையும் தனியாரிடம் கொடுத்து விடுங்களேன். கமிஷன் கரெக்ஷனுக்கு மட்டுமா அரசு.