தனித்தேர்வர்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு – சிபிஎஸ்இ அறிவிப்பு!!
சிபிஎஸ்இ பொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்கள் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி விண்ணப்பங்கள் சமர்பிக்க பிப்ரவரி 25 கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிபிஎஸ்இ பொதுத்தேர்வு:
கொரோனா பரவல் காரணமாக மாணவர்கள் ஆன்லைன் மூலமாக பாடங்களை கற்று வருகின்றனர். பொதுத்தேர்வு காரணமாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டன. இந்நிலையில் மத்திய கல்வித்துறை அமைச்சர் சிபிஎஸ்இ பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட்டார். அதன்படி மே மே 4 முதல் ஜூன் 10 வரை சிபிஎஸ்இ பொதுத்தேர்வு நடைபெறும்.
TN Job “FB Group” Join Now
மாணவர்களின் பொதுத்தேர்வு சுமையை குறைக்க மத்திய அரசு பாடத்திட்டத்தில் 40% பாடங்களை குறைத்து அறிவிப்பு வெளியிட்டது. தற்போது சிபிஎஸ்இ பொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்களுக்கு தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஆன்லைன் மூலமாக தனித்தேர்வு எழுதும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
‘மேட்’ நுழைவுத்தேர்வு விண்ணப்பம் – கால அவகாசம் நீட்டிப்பு!!
2021 ஆம் ஆண்டு தனித்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பல சிக்கல்கள் உள்ளதால் இந்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி சிபிஎஸ்இ பொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்கள் பிப்ரவரி 22 முதல் பிப்ரவரி 25 வரை விண்ணப்பிக்கலாம் எனவும் விண்ணப்பிக்கும் போது விண்ணப்பக் கட்டணத்துடன், தாமதக்கட்டணத்தையும் சேர்த்து செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்