தமிழகத்தில் பள்ளிக்கு வராத மாணவர்களின் நிலை – கணக்கெடுப்பு பணிகள் தீவிரம்!!
பொருளாதார நெருக்கடி:
கொரோனா தொற்றினால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கினால் பல குடும்பங்கள் பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் பல குழந்தைகள் தங்கள் கல்வியை கைவிட்டு வேலைக்கு செல்லும் சூழல் உண்டானது. பள்ளிகள் மீண்டும் திறந்த பின்னர் பெரும்பான்மையான மாணவர்கள் பள்ளிக்கு செல்ல தொடங்கி விட்டனர். ஆனால் மாணவர்களின் எண்ணிக்கை முன்பிருந்த நிலையை எட்டவில்லை.
தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மையங்கள் – பள்ளிக்கல்வித்துறை தகவல்!!
மத்திய அரசின் அறிவுறுத்தல்:
இந்நிலையில் மத்திய கல்வி அமைச்சகம் அனைத்து மாநில அரசுகளையும் மற்றும் யூனியன் அரசுகளையும் ஆசிரியர்கள், தொகுதி வள கல்வியாளர்கள் உதவியுடன் பள்ளிக்கு வராத மாணவர்களின் விவரங்களை விரிவான முறையில் வீடு வீடாக கணெக்கெடுப்பு நடத்துமாறு அறிவுறுத்தியது. இதற்கு முன்னர் மத்திய கல்வி அமைச்சகத்தின் இணை செயலாளர் மனிஷ் கார்க் சமர்ப்பித்த கணக்கிற்கும், மாநில அரசுகளின் தரவுகளும் அதிக வித்தியாசமாக இருந்தது.
கணக்கெடுப்பு:
சமக்ரா சிக்ஷா அபியான், தொகுதி வள கல்வியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் மூலம் பள்ளி வாரியாக வெளியேறிய மாணவர்கள், நீண்ட காலமாக பள்ளிக்கு வராதவரக்ள் மற்றும் ஒழுங்கற்ற மாணவர்கள் ஆகியோரின் பட்டியலை எடுக்கும்படி உத்தரவிட்டது. மேலும் அவர்களின் வீடுகளுக்குச் சென்று காரணங்களை கண்டறியும் படியும் அறிவுறுத்தியுள்ளது. இதைத் தவிர சிறப்பு குழந்தைகள், புதிய திறன் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளின் தரவுகளையும் தற்போது சேகரிக்கப்பட்டு வருகின்றன.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்