தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மையங்கள் – பள்ளிக்கல்வித்துறை தகவல்!!
தமிழகத்தில் நடப்பு ஆண்டில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மையங்களை மாணவர்கள் இருப்பிடங்களுக்கு அருகிலேயே அமைக்க வேண்டும் என்ற ஆசிரியர் சங்கத்தினரின் கோரிக்கையை தமிழக அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேர்வு மையங்கள்:
தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் 100க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் மாணவர்களை கொண்ட பள்ளிகளுக்கு அவர்களின் பள்ளியிலேயே பொதுத்தேர்வு நடத்தப்படும். 100க்கும் குறைவான எண்ணிக்கையில் மாணவர்களை கொண்ட பள்ளிகளின் மாணவர்களுக்கு அருகில் உள்ள பெரிய தேர்வு மையத்தை ஒதுக்குவது வழக்கமாக உள்ளது.
கூட்டு மற்றும் இரட்டை பட்டப்படிப்பு – யூஜிசி இறுதி வரை அறிக்கை வெளியீடு!!
கொரோனா தொற்று:
நடப்பு ஆண்டில் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் மே 3ம் தேதி முதல் 21ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இன்னும் 10 மற்றும் 11ம் வகுப்புக்கான தேர்வு அட்டவணை வெளியிடப்படவில்லை. தேர்வு அட்டவணை வெளியிடும் போதே தேர்வு மையத்தின் தகவல்களையும் தேர்வு வாரியம் பொதுவாக அறிவிக்கும். நடப்பு ஆண்டில் கொரோனா தொற்று காரணமாக மாணவர்களின் இருப்பிடங்களுக்கு அருகிலேயே தேர்வு மையத்தை அமைக்க வேண்டும் என்று ஆசிரியர் சங்கத்தின் சார்பாக அரசுக்கு முன்னதாக கோரிக்கை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.
பரிசீலினை:
மாணவர்கள் தாங்கள் படிக்கும் பள்ளியிலேயே பொதுத்தேர்வு எழுத அனுமதித்தால் தேர்வில் நியாயமற்ற நடைமுறைகள் அதிகமாகும். ஆசிரியர்கள் மாணவர்களுக்கு உதவக்கூடிய சூழல் உண்டாகும். இதனால் கண்காணிப்பாளர்கள், பறக்கும் படையினர், தேர்வு அதிகாரிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்க வேண்டிய சூழல் உண்டாகும். இது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்