தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு அமல் – கட்டுப்பாடுகள் தீவிரம்!!

0
தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு அமல் - கட்டுப்பாடுகள் தீவிரம்!!
தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு அமல் - கட்டுப்பாடுகள் தீவிரம்!!
தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு அமல் – கட்டுப்பாடுகள் தீவிரம்!!

ஏப்ரல் 20 (நாளை) முதல் மாநிலம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி ஆள் நடமாட்டம் இல்லாத, வெறிச்சோடி காணப்பட்ட சாலைகளில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

இரவு நேர ஊரடங்கு:

தமிழகத்தில் கொரோனா நோய் தடுப்பு கட்டுப்பாட்டு நடவடிக்கையாக இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை மளிகை, ஜவுளி கடைகள், வணிக வளாகங்கள் என அனைத்து கடைகளும் மூடப்பட்டது. சென்னை உட்பட தமிழகத்தில் எந்த பகுதிகளிலும் இருந்து பேருந்துகள் இயக்கப்படவில்லை. ஆட்டோக்களும், பேருந்துகளும் ஓடாததால் சாலை வெறிச்சோடி காணப்பட்டது. அதன்படி சென்னையில் அண்ணா சாலை, காமராஜர் சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, ஆற்காடு சாலை ஆகிய முக்கிய பகுதிகள் அனைத்தும் தடுப்பு கம்பிகளால் மூடப்பட்டது.

TN Job “FB  Group” Join Now

நகரின் முக்கிய சாலைகள் அனைத்திலும் போலீசார் ரோந்து பணிகளை மேற்கொண்டனர். அதன்படி திருச்சி, திண்டுக்கல், சேலம், கரூர் பகுதிகளில் இரவு 10 மணிக்கு முன்னதாகவே அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. பேருந்து இயக்கங்களும் 9 மணியளவில் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. சேலம் மாவட்டத்தில் மருந்து கடைகளை தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. முக்கிய பாலங்களில் வாகனங்கள் செல்லாமல் இருக்க தடுப்பு கம்பிகள் போடப்பட்டிருந்தன. கரூர் மாவட்டத்திலும் முக்கிய சாலைகளில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அதே போல மதுரை, நெல்லை, தூத்துக்குடியில் இரவு நேரங்களில் பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டது.

குரூப் 1 விடைத்தாள் நகல் இணையதளத்தில் பதிவிறக்கம் – டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு!!

மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம் போன்ற பேருந்து நிலையங்களில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் பேருந்து இயக்கம் இரவு 9 மணியுடன் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. அதன்படி அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வந்த சரக்கு வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டது. பணி நிமித்தமாக காலதாமதம் ஆகி வந்தவர்களை போலீசார் விசாரித்து அனுப்பி வைத்தனர். சென்னை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் ரோந்து பணிகளை பார்வையிட்டார். சென்னையில் நேற்று இரவு முழுவதும் 250க்கும் மேற்பட்ட போலீசார் காண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!