மினி கிளினிக்குகளில் 1,415 செவிலியர் & 585 உதவியாளர் பணியிடங்கள் – ஐகோர்ட் கிளை அதிரடி தீர்ப்பு!!
தமிழகம் முழுவதும் திறக்கப்பட்டு உள்ள மினி கிளினிக்குகளில் தனியார் ஏஜென்சி மூலம் மருத்துவ பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டு இருந்தால் செல்லாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவினை பிறப்பித்து உள்ளது.
மருத்துவ பணியாளர் நியமனம்:
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் மாநிலம் முழுவதும் 2000 மினி கிளினிக்குகளை நிறுவும் திட்டத்தை தொடங்கி வைத்தார். இதனால் சிறிய வியாதிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும். இதில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர் மற்றும் ஒரு உதவியாளர் என 3 பேர் பணியமர்த்தப்படுவர். மேலும் தனியார் ஏஜென்சி மூலம் இதற்கு பணியாட்கள் நியமனம் செய்யப்பட்டது. இதனை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
NIFT நுழைவுத்தேர்வு 2021 – விண்ணப்பிக்க கடைசி நாள்!!
இது தொடர்பாக விளக்கம் அளித்த தமிழக அரசு, மத்திய அரசின் நெறிமுறைகளுக்கு உட்பட்டே தற்காலிகமாக பணியாட்கள் நியமனம் செய்யப்படுவதாக தெரிவித்தது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அதில் தனியார் ஏஜென்சி மூலம் மருத்துவ பணியாட்கள் மினி கிளினிக்குகளில் நியமனம் செய்யப்பட்டு இருந்தால் அது செல்லாது என அதிரடி உத்தரவினை பிறப்பித்து உள்ளது.
1 மற்றும் 2 ஆம் வகுப்புகளுக்கு பிப்ரவரி 1 முதல் பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!!
தமிழகம் முழுவதும் 2000 மினி கிளினிக்குகளுக்கு 1,415 செவிலியர்கள், 585 மருத்துவ உதவியாளர்கள் நியமனம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில், மதுரையை சேர்ந்த வைரம் சந்தோஷ் என்ற நபர் தொடர்ந்த வழக்கில் இவ்வாறு தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்