1 மற்றும் 2 ஆம் வகுப்புகளுக்கு பிப்ரவரி 1 முதல் பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!!

0
1 மற்றும் 2 ஆம் வகுப்புகளுக்கு பிப்ரவரி 1 முதல் பள்ளிகள் திறப்பு - மாநில அரசு அறிவிப்பு!!
1 மற்றும் 2 ஆம் வகுப்புகளுக்கு பிப்ரவரி 1 முதல் பள்ளிகள் திறப்பு - மாநில அரசு அறிவிப்பு!!
1 மற்றும் 2 ஆம் வகுப்புகளுக்கு பிப்ரவரி 1 முதல் பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!!

கொரோனா காரணமாக 10 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டு இருந்த பள்ளிகள் பிப்ரவரி 1 முதல் 1 மற்றும் 2 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் திறக்க அனுமதிக்கப்படும் என பஞ்சாப் மாநில அரசு அறிவித்து உள்ளது.

பள்ளிகள் திறப்பு:

பஞ்சாப் மாநிலத்தில் கடந்த வருட மார்ச் மாத இறுதியில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனை பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. பின்னர் தொற்று குறைந்ததை தொடர்ந்து கல்வி நிறுவனங்களை திறக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது வெளியான அறிவிப்பின் படி, அரசு, அரசு உதவி பெறும், தனியார் என அனைத்து பள்ளிகளும் ஜனவரி 27 முதல் 3 மற்றும் 4 வகுப்புகள் மற்றும் பிப்ரவரி 1 முதல் 1 மற்றும் 2 வகுப்புகள் என இரண்டு கட்டங்களாக மீண்டும் திறக்க பஞ்சாப் அரசு அனுமதி அளித்துள்ளது.

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10% இடஒதுக்கீடு – மத்திய அரசு விளக்கம்!!

ஏற்கனவே அக்டோபர் 15 முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல அரசு அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஜனவரி 6 ஆம் தேதி 5 முதல் 8 வகுப்புகளுக்கு பள்ளிகளையும் திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

பெற்றோரின் தொடர்ச்சியான கோரிக்கையைத் தொடர்ந்து, ஜனவரி 27 முதல் தொடக்க வகுப்புகளுக்கான பள்ளிகளை மீண்டும் திறக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக பஞ்சாப் பள்ளிக்கல்வி அமைச்சர் விஜய் இந்தர் சிங்லா தெரிவித்தார். முதலமைச்சர் அமரீந்தர் சிங் அளித்த ஒப்புதலின் படி, இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் 2 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி – மீண்டும் மூடப்படுமா பள்ளிகள்??

பள்ளிகள் செயல்படும் நேரங்கள் மாற்றப்படவில்லை என்றும், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்புவதற்கு முன் எழுத்துப்பூர்வ ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பள்ளி வளாகங்கள் மற்றும் வகுப்பறைகளை முறையாக சுத்தம் செய்வதை உறுதிசெய்யவும், மத்திய அரசின் வழிகாட்டுதல்களின்படி கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றவும் கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் பள்ளி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் விரைவில் விரிவான வழிகாட்டுதல்கள் வழங்கப்படும், அவை அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் விநியோகிக்கப்படும் என அமைச்சர் கூறியுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!