தமிழகத்தில் உருமாறிய கொரோனா தொற்று பரவல் – சுகாதாரத்துறை செயலர் விளக்கம்!!

0
தமிழகத்தில் உருமாறிய கொரோனா தொற்று பரவல் - சுகாதாரத்துறை செயலர் விளக்கம்!!
தமிழகத்தில் உருமாறிய கொரோனா தொற்று பரவல் - சுகாதாரத்துறை செயலர் விளக்கம்!!
தமிழகத்தில் உருமாறிய கொரோனா தொற்று பரவல் – சுகாதாரத்துறை செயலர் விளக்கம்!!

தமிழகத்தில் மக்கள் முறையாக முகக்கவசம் அணியாதது தான் மீண்டும் அதிக நோய்பரவலுக்கு காரணம் என்றும், புதுவகை கொரோனா தொற்று இன்னும் மாநிலத்தில் கண்டறியப்படவில்லை என்றும் சுகாதாரத்துறை செயலாளர் அறிவித்துள்ளார்.

கொரோனா தொற்று:

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா தொற்றின் முதல் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு முறை அமல்படுத்தப்பட்டது. முழு ஊரடங்கினால் தமிழகத்தில் உள்ள அனைத்து தொழில் துறைகளும், வணிகர்களும், கல்வியும் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால் சாதாரண மக்கள் பெரிய அளவிலான இழப்புகளை சந்தித்தனர்.

எம்.பிஏ., எம்சிஏ., எம்எஸ்சி., தொலைதூர பட்டப்படிப்பு விண்ணப்பம் – அண்ணா பல்கலை வரவேற்பு!!

இயல்பு நிலை:

கொரோனா தொற்றின் பரவல் கடந்த டிசம்பர் மாதத்தின் இறுதியில் இருந்து மெல்ல குறையத் தொடங்கியது. இதனால் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டது. பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப தொடங்கினர். பள்ளி, கல்லூரிகள் மீண்டும் செயல்படத் தொடங்கியது. இந்நிலையில் திடீரென்று நடப்பு மாதத்தின் தொடக்கத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது. தொற்று பரவலின் எண்ணிக்கை ஒரு நாளுக்கு 1000 என்ற அளவை எட்டியுள்ளது. இதனால் மீண்டும் பள்ளி, கல்லூரிகள் அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

சுகாதாரத்துறை செயலாளர்:

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் அவர்கள் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், தமிழகத்தில் கொரோனா பரவலின் எண்ணிக்கை 2,000 ஐ தாண்டும் வகையில் சூழல் மாறியுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு சார்பில் பாதுகாப்பு நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறோம். பொது மக்கள் முகக்கவசத்தின் முக்கியத்துவத்தை மறந்து செயல்படுகின்றனர்.

தமிழக அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் – மத்திய அரசு உத்தரவு!!

உருமாறிய கொரோனா:

அனைவரும் முகக்கவசம் அணிவதன் மூலம் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும். முன்னதாக கொரோனா சிகிச்சை முகாம்களாக பயன்படுத்தப்பட்ட இடங்களையே, இம்முறையும் பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம். மேலும், தமிழகத்தில் இதுவரை உருமாறிய கொரோனாவான DOUBLE MUTANT வைரஸ் கண்டறியப்படவில்லை. தமிழகத்தில் இப்போது அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகளுக்கு வெளிநாடு கொரோனா பாதிப்பு காரணமில்லை என்றும் கூறியுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!