
“புதிய கல்விக்கொள்கையை ஏற்றுக்கொள்ளாததால் தமிழக அரசுக்கு ரூ.5,000 கோடி இழப்பு”.. மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அதிரடி பேச்சு..
மத்திய அரசு அமல்படுத்தியுள்ள புதிய கல்விக்கொள்கையை பல்வேறு மாநிலங்கள் ஏற்றுக்கொண்ட நிலையில், தமிழ்நாடு, கேரளா உட்பட சில மாநிலங்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. மேலும், புதிய கல்விக்கொள்கை வாயிலாக அரசு பள்ளிகளில் ஹிந்தி திணிக்கப்படுகிறது என தமிழ்நாடு அரசு தொடர்ந்து வாதம் செய்து, மத்திய அரசுக்கு எதிராக போராடி வருகிறது. இந்நிலையில் மத்திய அரசின் பள்ளிக்கல்வித் திட்டம் பற்றி புதிய தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
இனி ரயில் டிக்கெட்டுக்கு இதுதான் ரூல்ஸ்…!! இந்திய ரயில்வே வெளியிட்ட முக்கிய அப்டேட்…!!
அதாவது, “தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்ட மாநிலங்களுக்கு மத்திய அரசின் நிதி முழுமையாக வழங்கப்பட்டு வருகிறது என்றும், பிஎம் ஸ்ரீ திட்டத்தை தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொள்ள மறுப்பு தெரிவிக்கும் காரணத்தால், ஒட்டுமொத்தமாக ரூ.5000 கோடி நிதியை இழந்துள்ளது என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். மேலும், பொறுப்புள்ள பதவியில் உள்ளவர்கள் தமிழ்நாட்டில் இந்தி திணிப்பு என தவறான கருத்தை பரப்பக்கூடாது எனவும், இதனால் மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய முன்னேற்றம் மிகுந்த கல்வித்திட்டங்களை நிராகரிப்பது பிற்போக்குத்தனமானது என்று கூறியுள்ளார்”.























